பொதுவாகவே நமது உடலில் இருக்கும் ஒவ்வொரு பாகமும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது. இதில் இந்த உறுப்பு தான் அதிக முக்கியத்துவமானது என்று குறிப்பிட்டு கூற முடியாது. நமது உடல் பாகங்களின் ஏதாவது பாதிப்பு வரும் போது தான் உண்மையிலேயே அதன் மதிப்பையும்,அருமையும் நம்மால் உணர முடியும்.
நாம் சில நேரங்களில் நம்மை அறியாமலேயே நமது கண்களை அடிக்கடி தேய்த்து கொள்கிறோம். ஆனால் அது முற்றிலும் தவறானது அதனை நாம் தவறியும் செய்யக்கூடாது என்றும் மருத்துவத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஏன் கண்களை தேய்க்க கூடாது? stop rubbing your eyes
காரணம் கண்களை தேய்க்கும் போது கைகளில் இருக்கும் கிருமிகள் விரைவாக கண்களில் பரவி கண்களுக்கு மிகுந்த பாதிப்பை உண்டாக்கக்கூடும். மற்ற பாகங்களை விடவும் கண்களின் மூலம் நோய் கிருமிகள் பரவும் speed மிகவும் அதிகம். இது பார்ப்பதற்கு சாதாரண செயலாக தோன்றினாலும் இதனால் வரும் பாதிப்புகள் மிகவும் மோசமானதாக அமையும்.
இதையும் படிங்க : பெண்கள் எந்த பக்கம் மூக்குத்தி அணிந்து கொள்ள வேண்டும் வலப்பக்கமா.. இடப்பக்கமா..?
வியாதி உள்ளவர்கள் பேசும்போதும் அல்லது இருமல் வரும் போதும், அவர்கள் வாயில் இருந்து மற்றொருவர் முகத்தில் வைரஸ் கிருமி துளிகளை வெளியிடலாம். உங்கள் வாய் அல்லது மூக்கில் இருக்கும் சளி சவ்வுகள் மூலமாக இந்த நீர்த்துளிகளை நீங்கள் உள் இழுப்பதற்கு அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.
குறிப்பாக கான்ஜுன்டிவா, மெல்லிய, வெளிப்படையான திசுக்களின் படலம், இது உள் கண் இமை மற்றும் கண்ணில் உள்ள வெள்ளைப் பகுதியை உள்ளடக்கியது. கண்களை அடிக்கடி கசக்கும் போது உங்கள் கண்களைப் பாதுகாக்கும் சவ்வுகள் மூலமாகவும் நோய் கிருமிகள் உடலுக்குள் நுழைவதற்கு வாய்ப்பு காணப்படுகின்றது.
மேலும், யாரேனும் பாதிப்பிற்கு உள்ளான கண்ணைத் கசக்கிவிட்டு, பிறரைத் தொட்டால் வைரஸ் கிருமிகள் மற்றும் தொற்றுகள் பரவுவதற்கு வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது. எனவே சுத்தம் இல்லாத கைகளால் அடிக்கடி கண்களை தொடுவதை முற்றிலும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக தவறியும் கண்களை கசக்குவது மற்றும் தேய்ப்பது போன்றவற்றை தவறியும் செய்யவே வேண்டாம்.
இதையும் படிங்க : ஆரோக்கியமா வாழ உதவும் சில பழக்கங்கள்!