10 Year Love Cheated : மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் அடுத்துள்ள கீழ பனையூர் கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் அன்பழகன் மகன் பாலு வயது 34… இவர் அதே தெருவை சேர்ந்த பொன்னுசாமி என்பவரது மகள் சுபஸ்ரீயை(வயது 24) காதலிப்பதாக சொல்லி 10 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர்…
மேலும் பாலு சுபஸ்ரீயை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி அவ்வப்போது இருவரும் தனிமையிலும் இருந்து வந்துள்ளனர்…. இந்த நிலையில் தற்போது அந்த பெண்ணை திருமணம் செய்ய பாலு மறுத்துள்ளார்….
Read Also : இளந்தமிழ் மன்றம் 3000 மாணவர்களை ஒருங்கிணைத்து மாபெரும் உலக சாதனை
இதனால் சுபஸ்ரீ மயிலாடுதுறையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் காவல் உதவி ஆய்வாளர் புஷ்பலதா அவர்களிடம் புகார் அளித்துள்ளார். மேற்படி பாலூ மீது பெண்ணை ஆசைவார்த்தைக் கூறி ஏமாற்றியது கொலை செய்து விடுவேன் என மிரட்டியது உட்பட பிரிவு 417, பிரிவு 420, பிரிவு 506/1 ஆகிய பிறகு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…