வி தமிழ் நியூஸ் வாசகர்களுக்கு வணக்கம்..! இன்று நம் பதிவின் மூலமாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவலை பற்றி தான் தெறிந்துகொள்ளப்போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுவதும் படித்து பயன்பெறுங்கள். பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருமே ஏதாவது ஒரு சாதனை செய்ய வேண்டும். சாதனை செய்ய வேண்டியதற்கான அனைத்து திறமைகளும் ஒவ்வொருவரிடமும் உள்ளது.
அப்படி நம் நாட்டிலும் ஆண்கள் பெண்கள் பல பேர் சாதனைப் படைத்து பல பரிசுகளை பெற்றிருக்கிறார்கள். அப்படி சாதனை படைத்து நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் யார் என்று என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ள போகின்றோம். நோபல் பரிசு முதலில் பெற்ற தமிழர் யார் என்று உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை எனில் அதை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..!
1st Tamilan To Win Nobel Prize
பொதுவாக ஆல்பிரட் நோபல் (Alfred Nobel) என்பவரின் நினைவு தினத்தன்று தான் இந்த நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த நோபல் பரிசானது வேதியியல், இயற்பியல், இலக்கியம், அமைதி, மற்றும் மருத்துவம் உள்ளிட்ட துறைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நோபல் பரிசு1901-ம் ஆண்டில் இருந்து பல சாதனையளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இதுவரை 13 இந்தியர்கள் இந்த நோபல் பரிசை பெற்றுஉள்ளனர் . அவர்களில் சிலர் இந்தியக் குடியுரிமை பெற்றவர்கள் அல்லது இந்தியாவில் பிறந்த வெளிநாட்டிலுள்ளவர்.
இதையும் படிங்க : Google கூட பிளாக் ஆனதாம்., TVK தலைவரை நேரடியாக தாக்கி பேசிய வேல்முருகன்
சி.வி. ராமன் நோபல் பரிசு பெற காரணம் என்ன:
முதன் முதலில் சி.வி. ராமன் என்ற தமிழர் தான் நோபல் பரிசு பெற்றார் என்று போற்றப்படுகிறார். அதுமட்டுமின்றி தேசிய அறிவியல் தினம் கொண்டாடுவதற்கு மிக முக்கிய காரணமே இவர் தான், என்ன உங்களால் நம்பமுடிகிறதா..?
ஆமாங்க..! பிப்ரவரி 28 ஆம் தேதியை தேசிய அறிவியல் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாள் சர் சி.வி. ராமனை பெருமைப்படுத்தும் வகையில் ஒவ்வொரு வருடமும் கொண்டாடபட்டு வருகிறது.
சி.வி.ராமன் இயற்பியலில் “ஒளிச் சிதறல்” குறித்த தனது ஆராய்ச்சிக்காக இயாற்பியளுக்கனாக நோபல் பரிசு பெற்றார். ஏ.வி.என் கல்லூரியில் படிக்கும் போது தனக்குள் ஏற்பட்ட யோசனைகள் தான் இந்த நோபல் பரிசு பெறுவதற்கு காரணம் என்று சி.வி.ராமன் தனது வாழ்க்கை வரலாற்றில் எழுதியிருக்கிறார்.
பிப்ரவரி 28 ஆம் தேதி தனது முக்கியமான ஆராய்ச்சியின் முடிவை வெளியிட்டார் ஆகவே அந்த நாளை தேசிய அறிவியல் நாளாக கொண்டாடப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க : காதலுக்காக ஏங்கும் தொகுப்பாளினி பிரியங்கா, நிறைய பிள்ளைகள் பெத்துக்கணும், மழலை பற்றி கண்கலங்கி பேச்சு
படைத்த சாதனைகள்:
சந்திரசேகர வெங்கட ராமன் திருச்சியில் 1888 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி பிறந்தார். இவர் 16 ஆவது வயதில் முதல் நிலையில் இளங்கலை பட்டத்தை சென்னை பிரசிடென்சி கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார்.
லண்டன் அறிவியல் இதழில் அவரின் முதல் ஆய்வு அறிக்கையானது அவரது 18 ஆவது வயதிலேயே வந்தது. அப்போதே உலகளவில் அறிவியலில் அவருடைய கால் தடம் பதிக்கப்பட்டது. பிற்காலத்தில் ஒளி, ஒலி, காந்தசக்தி போன்ற பல ஆய்வுகளை மேற்கொண்டார்.
அப்படி இவர் கண்டுபிடித்த “ஒளிச் சிதறல்” என்னும் ஆராட்சிக்காக நோபல் பரிசு பெற்றார்.