2nd Book Festival : மயிலாடுதுறையில் 2-வது புத்தகத் திருவிழாவில் பெற்றொர்களையும், மாணவர்களையும் கவர்ந்த தொலைநோக்கி வழியாக கிரகங்களை காண்பது, கோளரங்கம் மூலம் கிரகங்கள், நட்சத்திரங்கள், பூமியை காணுதல், ரேபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு பற்றிய அரங்குகள் மாணவர்களையும், பெற்றொர்களையும் மிகவும் கவர்ந்தது.
மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் டாக்டர் ஜெய.ராஜமூர்த்தி கலந்துகொண்டு “படிப்போம்” “படைப்போம்” என்ற தலைப்பில் மாணவ மாணவிகள் புத்தகங்களை வாசிப்பதால் கிடைக்கும் நன்மைகளை எடுத்துரைத்தனர்:-
2nd Book Festival
மயிலாடுதுறை மாவட்டத்தின் 2-வது புத்தகத் திருவிழாவின் 2வது நாள் விழா 4/02/2024 நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், பொதுநூலக இயக்ககம் பள்ளிக்கல்வித்துறை, சார்பில் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் 3/02/2024 தொடங்கிய புத்தக கண்காட்சி வருகின்ற 12ம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாம் நாள் புத்தகத் திருவிழாவில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் டாக்டர் ஜெய.ராஜமூர்த்தி, பங்கேற்று“படிப்போம்” “படைப்போம்” என்ற தலைப்பில் மாணவ மாணவிகள் புத்தகங்களை வாசிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்துரைத்தனர்.
இந்த கண்காட்சியில் மண்ணின் மைந்தர்களான கவிச்சக்கரவர்த்தி கம்பர், கல்கி, மாயவரம் வேதநாயகம், மூவலூர் ராமாமிர்தம் உள்ளிட்ட மயிலாடுதுறை மண்ணில் பிறந்த அறிஞர்களின் புகழ்பெற்ற புத்தகங்களுக்கான தனி அரங்கம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. சாண்டில்யணின் சிவகாமியின் சபதம், கல்கியின் பொன்னியின் செல்வன் போன்ற என்னற்ற சரித்திர கதைகள் அடங்கிய புத்தகங்கள், பழங்காலத்தில் உள்ள இந்தியா முதல் தற்கால இந்தியா வரை உள்ள அனைத்து புத்தகங்கள், நாவல்கள், பிரபல தலைவர்களின் சரித்திர புத்தகங்கள் என்று தனி அரங்கு, மாணவர்களுக்கு போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து வகையான புத்தகங்களும், பொதுஅறிவுத் திறனை வளர்த்துக் கொள்ளும் வகையில் அதற்கு தேவையான புத்தகங்கள் என 80 அரங்குகளில் பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்காக காட்சி படுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
Read Also : சங்கி என்பதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?
மேலும், தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களை விளக்கும் திட்டவிளக்க கண்காட்சி அரங்குகள், காவல்துறை சார்பில் குற்றங்களை தடுக்கும் விழிப்புணர்வு அரங்கு போன்ற பல்வேறு அரங்குகள் பொது மக்களை மிகவும் கவர்ந்தது.
இதில் குறிப்பாக பெற்றோர்கள், மாணவர்களை கவர்ந்த பிகைன்ட் எர்த் சேனல் குழுவினரால் அமைக்கப்பட்ட தொலைநோக்கி வழியாக கிரகங்களை காணுதல், பிர்லா கோளரங்கம் போல் சிறிய அளவிலான கோளரங்கம் மூலம் கிரகங்கள் நட்சத்திரங்கள், சந்திரன், பூமி கோள்கள் காட்டப்பட்டது
மாணவர்கள் பெற்றோர்கள், மாணவர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வரிசையில் நின்று கண்டு ரசித்தனர். மாணவர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம் அரங்கில் செயற்கை நுண்ணறிவு கற்பது குறித்த விழிப்புணர்வு அரங்கமும் மாணவர்களை வெகுவாக கவர்ந்தது. பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் பங்கேற்று பரிசுகளை வழங்கினார்.