3வது திருமணம் : விசாகப்பட்டினம், அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தின் பழங்குடியினத்தவர் கிராமத்தில் ஒரு விசித்திரமான திருமணம் நடைபெற்றுள்ளது. அதாவது 3 வது திருமணம் செய்து கொள்ளும் கணவனுக்கு முதல் 2 மனைவிகள் இணைந்து திருமண ஏற்பாடுகளை செய்த அரிய நிகழ்வுதான் அது. கடந்த ஜூன் 25 ஆம் தேதி ஆந்திராவிலுள்ள ஒரு குக்கிராமத்தில் நடைபெற்ற இந்த திருமண வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தகவலின் படி, மணமகன் பெடபயலு மண்டலத்திற்கு உட்பட்ட கிஞ்சூரு என்ற கிராமத்தை சேர்ந்த எஸ்.பாண்டன்னா என்பது தெரியவந்துள்ளது. முதலில் இவர் கடந்த 2000 ஆம் வருடம் சாகேனி பர்வதம்மா என்ற பெண்ணை திருமணம் செய்தார். ஆனால் இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. இதனால் தனக்கு ஏற்கனவே திருமணமானதை மறைக்காமல் கடந்த 2005 ஆம் வருடம் சகேனி அப்பலாம்மா என்பவரை 2 வது திருமணம் செய்துக்கொண்டார்.
கணவனின் 3 வது திருமணத்திற்கு ஏற்பாடு செய்த மனைவிகள்
இந்நிலையில் கடந்த 2007 ஆம் வருடம் இவர்கள் இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்தது. தனது 2 மனைவிகள் மற்றும் ஆண் குழந்தையுடன் பாண்டன்னா ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். பின்னர் 2 வது மனைவிக்கு வேறு குழந்தை பிறக்காததால் மேலும் குழந்தைகளை பெற்றுக்கொள்ள 3 வது திருமணம் செய்வதற்கு முடிவு செய்துள்ளார் பாண்டன்னா. 2 திருமணங்கள் செய்துக்கொள்வதே அரிதாக இருக்கும் சூழலில் பாண்டன்னா 3 வது திருமணம் செய்வதற்கு விரும்பியுள்ளார். இது குறித்து பாண்டன்னா தனது மனைவிகளிடம் கூறியுள்ளார். அதன் பிறகு அவரது 2 மனைவிகள் சேர்ந்து கணவனின் 3 வது திருமணத்திற்கு தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். திருமணத்திற்கு அழைப்பிதழ் தயாரிப்பது, போஸ்டர் ஒட்டுவது போன்ற அனைத்து திருமண ஏற்பாடுகளையும் 2 பேரும் முன் நின்று செய்துள்ளனர்.
3rd Marriage arranged by 2 wife
இதையும் படிங்க : வீட்டுல பட்டாணியும் உருளைக்கிழங்கும் இருக்கா? அதுல குருமா செய்யுங்க… அருமையா இருக்கும்.
3 வது திருமணம் செய்த பாண்டன்னா
திட்டமிட்டவாறு ஜூன் 25 ஆம் தேதி பாண்டன்னா லஷ்மி என்கிற மேரி லாவன்யா என்ற பெண்ணை 3 வது முறையாக திருமணம் செய்துக்கொண்டார். பாண்டன்னா தனது 3 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வசிப்பார் என கிராம மக்கள் தெரிவித்தனர். ஆனால் பாண்டன்னா திருமணம் முடித்த கையுடன் 3 மனைவிகள் மற்றும் மகனுடன் வேறு ஒரு கிராமத்திற்கு சென்று வசிக்க தொடங்கவிட்டார். இந்தியாவில் இருக்கும் சில பழங்குடியின பகுதிகளில் ஆண்களுக்கு 2 மனைவிகள் இருப்பது வழக்கம் என்று அப்பகுதி வாசிகள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் ஒரு மனிதன் 3 வது முறையாக திருமணம் செய்துக்கொள்வது அவர்களுக்கு அரிதாகவே காணப்படுகிறது. அதுமட்டுமன்றி கணவனின் 3 வது திருமணத்துக்கு அவரது மனைவிகள் இணைத்து ஏற்பாடுகளை செய்தது சற்று வியப்பாக தான் இருக்கிறது.
இதையும் படிங்க : பதினேழு வயதில் திருமணம், அதைத் தொடர்ந்து விவாகரத்து; அடுத்து என்ன நடந்தது என்பதை ரேகா நாயர் கூறியுள்ளார்!!