54th year of Sri Radha Kalyanam : மயிலாடுதுறையில் நடைபெற்ற 54 ஆம் வருடம் ஸ்ரீராதா கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தார்கள், பஜனை பாடல்களுக்கு ஏராளமான பக்தர்கள் கூட்டாக நடனமாடி வழிபாடு செய்தனர். நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் பக்தி பரவசத்துடன் நடனம் ஆடிய காட்சி காண்போரை மெய் சிலிர்க்க வைத்தது.
54th year of Sri Radha Kalyanam
மயிலாடுதுறை மாவட்டம் மாயூரம் கிருஷ்ணமூர்த்தி பாகவதர் ராதா கல்யாண கமிட்டி சார்பாக , 54 ஆம் வருடம் ஸ்ரீராதா கல்யாண மகோத்ஸவம் மயிலாடுதுறையில் கடந்த 3 தினங்களாக நடைபெற்று வந்தது. இதில் நாமசங்கீர்த்தனம், அலங்கார திவ்யநாமம், நிச்சய தாம்பூலம், உஞ்சவ்விருத்தி, துரவ சரித்திரம் போன்ற சங்கீத நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ஸ்ரீராதா கல்யாணம் நடந்தது. இதனை முன்னிட்டு, பஜனை பாடல்களை பக்திப்பரவசத்துடன் பக்தர்கள் பாடி, வழிபாடு செய்தார்கள். பாகவத புராணம், இசைக்கப்பட்டது. இதை தொடர்ந்து மாங்கல்யதாரண நிகழ்ச்சியுடன், திருக்கல்யாணம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். நிகழ்ச்சியில் ஞான குரு பாகவதர் போன்ற தமிழகத்தின் பல்வேறு புகழ்பெற்ற பாகவதர்கள் பாகவத புராணங்கள் பஜனை உடன் இசைத்தனர்.
Read More : மயிலாடுதுறையில் தூய்மை பணியாளர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி…