81 feet tower : புனித அந்தோனியார் ஆலயத்தின் நூறாம் வருடத்தை முன்னிட்டு நாகை அருகே கோகூர் கிராமத்தில் 81 அடி உயர புதிய கொடி மரத்தில் கொடியேற்றம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.
81 feet tower புதிய கொடி மரத்தில் கொடியேற்றம்….
நாகப்பட்டினம் மாவட்டம் கீவேளூர் அடுத்த கோகூரில் பழைய புனித அந்தோனியார் கோயில் அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தில் நூற்றாண்டை முன்னிட்டு 81 அடியில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கொடிமரம் அமைக்கப்பட்டது. அதில் இன்று கொடியேற்றம் நடைபெற்றது.
முன்னதாக ஆலயத்தின் பங்கு தந்தை தேவ சகாயம் தலைமையில் சிறப்பு பலியானது நடந்தது. அதனை தொடர்ந்து ஊர்வலமாக கொடியினை எடுத்து வரப்பட்டு ஆலயத்தின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள 81 அடி உயரம் கொண்ட கொடிமரம் மற்றும் கொடியினை நாகப்பட்டினம் மறைவட்ட அதிபர் பன்னீர்செல்வம் புனிதம் செய்து வைத்தார் அதை தொடர்ந்து புனித அந்தோனியார் உருவம் பொறிக்கப்பட்டுள்ள கொடியினை கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.
Read More : திருவாவடுதுறை ஆதீனத்தில் புத்தக வெளியீட்டு விழா
அதனை தொடர்ந்து வண்ணமிகு வானவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைப்பெட்டது. இதில் அப்பகுதி சுற்றுவட்டார மக்களும், பக்தர்கள் ஏராளமானோர்கள் கலந்துகொண்டு புனித அந்தோணியாரை வழிபாடு செய்தனர்.
Watch Also : இயக்குனரின் அமீர் நெகிழ்ச்சி !!! நான் தரேன் 50 லட்சம் தானா…