தமிழகத்தில் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுதும் பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது அதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் சென்னை பல்லாவரத்தில் அதிமுகவின் பல்லாவரம் பகுதி கழகம் சார்பில் பல்லாவரம் பகுதிகழக செயலாளரும் முன்னாள் பல்லாவரம் நகர மன்ற துணைத் தலைவருமான த.ஜெயபிரகாஷ் தலைமையில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
ADMK Human Chain Struggle
இதில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் முன்னாள் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினருமான ப.தன்சிங் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.இதில் பல்லாவரம் பகுதி கழக நிர்வாகிகள், முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏராளமனோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க : தேங்காய், தக்காளி சேர்க்காமல் மதுரை நீர் சட்னி செய்வது எப்படி? 2 இட்லி கூடுதலாக சாப்பிடுவாங்க..!
இதையும் படிங்க : திருவாவடுதுறையில் பிரமாண்டமான இஸ்லாமிய கண்காட்சி