Apple Watch Series 10 : உடலியல் மாற்றங்களை கண்டுபிடித்து யூசர்களுக்கு அது சம்பந்தமான தகவல்களை வழங்குகிறது. தற்போது தொழில் நுட்ப ஆராட்சியில் ஈடுபட்டிருக்கும் வல்லுரான மார்க் குர்மன், விரைவில் ஆப்பிள் வாட்சுகளில் புதிய நிகழ்வுகளை பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.
உடல் ஆரோக்கியத்தினை கருத்தில் கொள்ளும் ஒவ்வொரு ஆப்பிள் பயனரும் இந்த தயாரிப்பிற்கு அடிமையாக உள்ளார்கள். அவைதான் ஆப்பிள் ஸ்மார்ட்வாட்சுகள். இந்த ஆப்பிள் வாட்ச் மாடல்களால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டதை செய்தி மூலமாக அறிந்துள்ளோம். எனினும், பல தரப்பட்ட வல்லுநர்களால் ஆப்பிள் வாட்சுகள் பரிந்துரைக்கபடுகிறது. இதற்கு முக்கியமான காரணம், இதில் பயன்படுத்தியிருக்கும் சென்சார்களின் தரமே.
Apple Watch Series 10
உடலியல் மாற்றங்களை யூசர்களுக்கு கணித்து அது சம்பந்தமான செய்திகளை வழங்குகிறது. தற்போது தொழில் நுட்ப தயாரிப்புகள் மீது ஆய்வு மேற்கொண்டிருக்கும் வல்லுநர் மார்க் குர்மன், விரைவில் ஆப்பிள் வாட்சுகளில் புதிய அம்சங்களை காணலாம் என்று தெரிவித்திருக்கிறார். மேலும், இது 2024 லில் அறிமுகம் செய்யப்படும் புதிய ஆப்பிள் வாட்ச் 10 வகையில் காணலாம் என்று தெரிவித்துள்ளார். என்னதான் ஆப்பிள் வாட்சுகள் யூசர்களுக்கு பல விதமாக பயன் கொடுத்தாலும், ஒன்றும் பெரிதாக புதிய அம்சங்களை சேர்க்கப்படுவதில்லை என்று தெரிவித்திருக்கும் குர்மன், இதன் காரணமாக பழைய தயாரிப்புகளிலேயே மக்கள் தொடர்வதற்கு அதிகம் வாய்ப்புகள் இருப்பதாக உணர்த்திருக்கிறார்.
Also Read : தமிழ்நாடு வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம்
இந்த சூழலில் ஆப்பிள் பல புதிய சேவைகளை அறிமுகம் செய்யும் முனைப்பால் பல சோதனைகள் செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதன்படி தூக்கத்தில் மூச்சு திணறல், அதிகப்படியான இரத்த அழுத்தம் போன்றவற்றை அறிந்து, உடனே மருத்துவ உதவியை செய்து கொள்ள யூசர்களுக்கு சமின்ஞை அனுப்பும் சேவையை ஆப்பிள் சோதனை செய்து வருகிறது. இந்த சேவையை அறிமுகம் செய்யும் காலத்தில், தலைசிறந்த ஸ்மார்ட்வாட்ச் தயாரிப்பை வழங்கும் நிறுவனங்களில் முதல் வரிசையில் ஆப்பிள் நிறுவனம் திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், வருக்காலத்தில் ஆப்பிள் வாட்சு மாடல்களை உயர்த்துவதற்கு இவை தகுதியான அம்சங்களாக திகழும் என்று குர்மன் கருத்து தெரிவித்திருக்கிறார். முந்தைய மாடல்களை விட பிரகாசமான டிஸ்ப்ளே, தலைசிறந்த புதிய சிப்செட் போன்ற அம்சங்களுடன் செப்டம்பர் மாதத்தில் சந்தைக்கு வந்த ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9, பெரிதாக யூசர்களுக்கு ஊக்கத்தை தராது என்று கணித்துள்ளார் மார்க் குர்மன். ஆகவே, வரவிருக்கும் புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 ல் மேற்கூறிய புதிய அம்சங்களை அவர் எதிர்பார்ப்பதாக கூறியிருக்கிறார்.
அலுமினிய கட்டமைப்பு உள்ள ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 ஸ்மார்ட்வாட்ச்சின் 41 மிமீ பதிப்பு இந்தியாவில் ரூ.41,900 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. அதே நேரத்தில் 45 மிமீ பதிப்பு ரூ. 44,900 என்ற விலையில் இருக்கிறது. முறையே ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கட்டமைப்புக் கொண்ட 41 மிமீ பதிப்பு ரூ.70,900 என்ற விலையாகவும், 45 மிமீ பதிப்பு ரூ.75,900 என்ற விலையாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் மேம்பட்ட பதிப்பான ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 ரூ.89,900 என்ற விலையில் விற்பனை செய்ய பட்டியலிடப்பட்டுள்ளது.
வாட்ச் சீரிஸ் 9 மற்றும் வாட்ச் அல்ட்ரா 2 இவைகள் தற்போது யூசரின் ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவைக் கண்காணிக்கவும், ஒழுங்கற்ற இதயத் துடிப்பை அறிந்து கொள்ளவும், உடல் வெப்ப விகிதத்தை அளவிடவும், ECG மானிட்டராகவும் செயல்பட உதவுகின்றன.
இரண்டு வாட்சுகளும் S9 SiP சிப்செட்டினால் இயக்கப்படுகின்றன. இந்த கடிகாரமானது கிட்டத்தட்ட ஒரு மினி டாக்டர் போலதான். ஆப்பிள் நிறுவனம் வாட்ச் சீரிஸ் 9 மாடல்களை முதல் கார்பன்-நியூட்ரல் தயாரிப்பு என கூறுகிறது. இதில் இருக்கும் புதிய அம்சம் என்னவென்றால், பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரலை சேர்த்து இரண்டு தடவை அழுத்தினால், அழைப்புகள், அலாரம், டைமர், போன்றவற்றைக் கட்டுப்படுத்தலாம்.