பணியின் போது நேர்மையுடன் வாழ்ந்து வந்த உதவி கமிஷனர் பணிக்காலம் முடிவடைந்தது. அதன் பின் சட்டத்தை கையில் எடுத்து நேர்மைக்கு புறம்பான எண்ணம் கொண்டு செயல்படும் அயோக்கியர்களை கிள்ளி ஏறிய புறப்படுகிறார்.
இப்படி ஒரு கதையை மையமாக வைத்து இருக்கும் படத்திற்கு “கடமை” என பெயரிட்டு உள்ளனர். இந்த திரைப்படத்தில் கே.சீராளன், பீமாராவ், சந்தியா, சங்கர், மோகன சுந்தரி, காயத்ரி, சுக்ரன், சாந்தி, கோபி, பிரியா, டெலிபோன் தேவா, தேவராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ass commissioner kadamai
ஒளிப்பதிவை பாபுவும், படத்தொகுப்பை பன்னீர்செல்வமும், இசை பிரசாத் கணேஷ் கவனித்துள்ளனர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்து வெளிவந்த “கடமை” 50 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படமாகும்.
அதே தலைப்பை இந்த படத்திற்கும் வைத்து இந்த கதையின் ஹீரோவாக நானே நடித்தால் நன்றாக இருக்கும் என்று டைரக்டர் சுக்ரன் சங்கர் சொன்னதால் கே.எஸ்.என்.எஸ். பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில், இந்த படத்தை நானே தயாரித்துள்ளேன் என்று கூறினார் கே.சீராளன்.
இதையும் படிங்க : நடிகருக்கு 60 வயது,அவர் திருமணம் செய்த 4 வது மனைவிக்கு 44 வயது விஷயம் இதுதான்.. அந்த நடிகருக்கு சொத்து ரூ.1500 கோடி?
படத்தை பற்றி இயக்குனர் சுக்ரன் சங்கர் பேசியதாவது:
இன்றைய காலகட்டத்தில் குற்றப் பிண்ணனியில் நடைபெறும் ஆணி வேரான ஆட்களை கண்டுபிடித்து வேரோடு அழிக்க முற்படும் நாயகன் தான் இந்த படத்தின் மையக்கரு. அன்றாடம் நம் கண் முன்னே நடைபெற்று கொண்டு வரும் சம்பவங்களை கோர்வையாக அமைத்து விறுவிறுப்பான திரைக்கதையுடன் “கடமை” என பெயர் சூட்டி இயக்கியுள்ளேன் என்று இயக்குனர் சுக்ரன் சங்கர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : சமுத்திரக்கனிக்கு அரசியல் சாயத்தால் வந்த அவப்பெயர்.. கை கட்டி நின்றதால் கிளம்பும் எதிர்ப்பு