திருநங்கைகளை பாலியல் தொழிலில் இருந்து மீட்ட திருநங்கைக்கு மயிலாடுதுறையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் சிறப்பு விருது வழங்கி கவுரவம் செய்யப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை யூனியன் கிளப்பில் உலக மகளிர் தின விழா ட்ரீம்ஸ் இந்தியா பவுண்டேஷன் சார்பில் கடைபிடிக்கப்பட்டது. தேர்தல் பிரிவு சிறப்பு வட்டாட்சியர் விஜயராகவன் தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் ட்ரீம்ஸ் இந்தியா நிர்வாக இயக்குனர் திருமதி வீரலட்சுமி காவல்துறை கண்காணிப்பாளர் கலைக் கதிரவன் ஆகியோர்கள் கலந்து கொண்டு பேசினர்.
இதையும் படிங்க : காலிஃபிளவர் ஊறுகாய் செய்வது எப்படி..?
Award for Transgender at Women’s Day
நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளை சார்ந்த சாதனை படைத்த பெண்களுக்கு விருதுகள் வழங்கினர். ஒரு மூதாட்டி தனது 80 வயதில் வீடு வீடாக சென்று 10 ரூபாய்க்கு 4 இட்லி என்று விற்கும் அவருக்கும், திருநங்கைகளை பாலியல் தொழிலில் இருந்து மீட்டு மாற்று தொழிலில் ஈடுபடச் செய்து பராமரித்து கொண்டு வரும் சினேகா ருத்ராபதி என்ற திருநங்கை போன்றவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது நெகழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சியில்ஏராளமான பெண்கள் பார்வையாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இதையும் படிங்க : நடிகை ஆனார் வரலட்சுமி சரத்குமாரின் அம்மா