Awareness rally cleanliness workers : மயிலாடுதுறையில் குப்பை இல்லா ஊராட்சி என்னும் தலைப்பில் தூய்மை பணியாளர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை எம் எல் ஏ தொடங்கி வைத்தார் :-
Awareness rally cleanliness workers
தமிழ்நாடு கிராம ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் , தூய்மை காவலர்கள் மற்றும் பள்ளி துப்புரவு பணியாளர்கள் நல சங்கதின் சார்பாக பொதுமக்கள் சுகாதாரமாக வாழ வேண்டுமென்ற நோக்கத்தோடு குப்பை இல்லா ஊராட்சி என்னும் தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தொடர்ந்து திரளான துப்புரவு பணியாளர்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். அதற்கு முன்பாக பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பணிவிடை,எம்எல்ஏ ராஜ்குமாரிடம் வழங்கினர். அதனை தொடர்ந்து பேரணியை எம்எல்ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தார். மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துவங்கிய இந்த பேரணியானது முக்கிய வீதிகள் வழியாக சென்று இறுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவுற்றது.
Read Also : இனி Mickey Mouse உங்கள் சொத்து ! பொது பயன்பாட்டிற்கு வந்த மிக்கி மவுஸ் !