Child Born Adi month : ஆடி மாதத்தில் பிள்ளை பிறந்தால் ஆட்டி படைக்கும் என்பது உண்மைதானா? அப்படி ஆடி மாதத்தில் குழந்தை பிறந்தால் எப்படி இருப்பார்கள் ?என்றுதான் இந்த பதிவில் விரிவாக பார்க்க போகிறோம். பெரும் பாலும் ஆடிமாதத்தில் குழந்தை பிறந்தால் எல்லோரும் பயப்படுவார்கள்.
அப்பாடி என்னது ஆடி மாதத்தில் பிறந்த குழந்தையா ? Child Born Adi month
ஆடி மாதத்தில் பிறந்த குழந்தையா என்று கூறிக்கொண்டே பலரும் ஆடி மாதம் வேண்டாம் ஆகவே அதற்கு முன்னாடியே அறுவை சிகிச்சை செய்து குழந்தையினை வெளியே எடுத்து விடலாமா ? என்ற ஒரு பெரிய கேள்விகளுக்கு கொண்டு போய்விடுகிறது. இந்த ஆடி மாசந்தான்!
ஆடிமாதத்தில் குழந்தை பிறந்தால் என்ன நடக்கும் ? அப்படி என்னதான் இந்த ஆடி மாதத்தில் இருக்கிறது ? என்னகாரணத்திற்காக இப்படி சொல்லியிருப்பார்கள் என்று தோணுகிறது? வேற ஒன்றும் இல்லைங்க !
சாஸ்திர ரீதியாக யோசித்து பார்த்தால் கடக ராசியில் சூரியபகவான் சஞ்சரிக்கின்ற மாதம் .சூரியனானவர் தகப்பனுக்கு சமமானவர். அதனால் சூரியன் இருந்தால் ஆகாத சூழல்கள் உருவாகும் அதனாலதான் சோதிடத்தின் மூலமாக சொல்லப்படுகிறது என்று ஒரு புரளியை கிளப்பி விட்டதால் இதை காலகாலமாக நம் மக்கள் நம்பி கொண்டிருக்கிறார்கள்.
உண்மையாகவே, எந்தமாதத்தில் குழந்தை பிறந்தாலும் எந்த பிரச்சினைகளும் நமக்கு ஏற்படாது. அதை நாம் தெளிவாக உறுதியாக மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஏன் ஆடி மாதத்தில் குழந்தை பிறந்தால் ஆட்டி படைக்கும் என்று சொல்கிறார்கள் என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு பலவிதமான காரணங்கள் உள்ளது.
Must Read: (Kajal) KanMai For Child Easy Made In Home
பொதுவாக ஆடி மாதத்தில் பிறந்த குழந்தைகள் மிகவும் சுட்டி தனமாக இருப்பார்கள். ஒரு குழந்தை நம் வீட்டில் எப்போதும் குறும்பு செய்துகொண்டு இருந்தால் நமக்கு கோபம் வரும் அதனாலதான் அவர்கள் செய்யும் சேட்டையினால் பல பிரச்சனைகள் வந்து சேரும் இதனால் பெற்றோர்களுக்கு மனக்கஷ்டத்தை கொடுப்பார்கள்.
இதுதாங்க ஆட்டிப்படைகிறதே தவிர, வாழ்க்கையில் ஏற்படும் பல ஏற்றத்தாழ்வுகளுக்கு ஆடிமாதத்தில் பிறந்த குழந்தைகளால் இல்லை. ஆடிமாதத்தில் பிறந்த குழந்தைகளின் குணாதிசயம் எப்படி இருக்கும்?
ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் குடும்பத்தின் மீது அதிகம் பாசம் கொண்டவர்களாக இருப்பார்கள். மிக புத்திசாலியாக இருப்பார்கள். எதையும் உடனே முடிவு செய்வது போல் தோன்றும், ஆனால் அவர்கள் அதனை மிகவும் யோசித்துதான் முடிவு எடுத்திருப்பார்கள்.
அதைப்பற்றி பின்னாளில் தான் தெரியும். கற்பனை திறன் உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களை கடுமையான வார்த்தைகளால் யாராவது திட்டிவிட்டால் அதை மனதில் வைத்துக்கொண்டு அவர்கள்மீது வெறுப்புணர்வுடன் இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு யாரையாவது பிடித்துவிட்டால் அவர்களிடம் எளிதில் பழகிவிடுவார்கள்.
முக்கியமாக ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் ஏதாவது திட்டம் தீட்டி களத்தில் இறங்கிவிட்டால் வெற்றியினை அடையாமல் வரமாட்டார்கள். அவர்கள் வாழ்க்கையில் எப்படிப்பட்ட பிரச்சனைகள் வந்தாலும் தாங்கக்கூடிய குணம் உள்ளவர்களாக இருப்பார்கள்.
Watch this Video : 300இல் இருந்து 400 பேரை அசால்ட்டா ஏற்றிக் கொண்டு செல்லலாம்!!