Consecration of 5 temples : மயிலாடுதுறை அருகே கட்டளைசேரி கிராமத்தில் சிதம்பரேஸ்வரர் கோயில், ஸ்ரீ வெங்கடாஜலபதி ஆலயம் ஆகிய 5 ஆலயங்களின் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்:
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பொன்னூர் கட்டளைசேரி கிராமத்தில் பழமை வாய்ந்த சித்தி விநாயகர் ஆலயம், சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் ஆலயம், பூதேவி ஸ்ரீதேவி சமேத வெங்கடேச பெருமாள் ஆலயம், நெல்லி கொல்லை மாரியம்மன் ஆலயம், மன்மத சாமி ஆலயம் உள்ளிட்ட 5 ஆலயங்கள் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இந்த ஆலயங்கள் கிராம மக்கள் உதவியுடன் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம்1/3/2024 லில் நடைபெற்றது.
இதையும் படிங்க : கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி ஆலோசனைக் கூட்டத்தில் திமுகவினர் பெருமிதம்
இதனை முன்னிட்டு 4 கால யாகசாலை பூஜைகள் கடந்த 26 ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. புனித நீர் அடங்கிய கடங்கள் யாகசாலையில் வைக்கப்பட்டு 4 கால யாகம் நடைபெற்றது. 1/3/2024 லில் காலை 4 ஆம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து மகா பூர்ணாகுதிக்கு பிறகு மங்கள வாத்தியங்கள் இசைக்க புனித நீர் அடங்கிய கடங்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கோபுர கலசங்களை அடைந்து அங்கு பூஜிக்கப்பட்ட கும்ப கலச விமானத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு மகாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க : தேங்காய், தக்காளி சேர்க்காமல் மதுரை நீர் சட்னி செய்வது எப்படி? 2 இட்லி கூடுதலாக சாப்பிடுவாங்க..!