Welcome to V Tamil Tv ..... VTamilTv.com என்பது பொதுமக்களுக்கு பயன் உள்ள தகவல் மற்றும் பொழுதுபோக்கு, லைப்ஸ்டைல், அழகு குறிப்பு, உடல் நலம் ஆரோக்கியம் குறித்த தகவல்கள் வழங்கும் இணையதளம் ஆகும்.

மயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதில் ஊழல்!! நக்கல் அடித்த நகராட்சி ஆணையர்..

Published :
-விளம்பரம்-

Corruption in new bus stand : மயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதில் ஊழல் ரூ 24 கோடிக்கு டெண்டர் விட்டுவிட்டு ரூ 15 கோடிகளுக்கு மட்டும் நடந்தது, நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் பரப்பான குற்றச்சாட்டு, நகர் முற்றிலும் சாக்கடை வழிந்து ஓடுகிறது. திமுக கவுன்சிலர்கள் திமுக சேர்மனை பார்த்து பேச்சு, நீங்கள் அடிக்கடி சிங்கப்பூர் செல்லாதீர்கள் என்று நக்கல் அடித்த நகராட்சி ஆணையர்:

Corruption in new bus stand

மயிலாதுறையில் நகராட்சி மாதாந்திர கூட்டம் திமுக நகர்மன்ற தலைவர் குண்டாமணி என்கிற செல்வராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நகரத்தின் பல்வேறு திட்டங்களை பற்றி காரசாரமாக விவாதம் நடத்தினர்.திமுக கட்சியின் கூட்டணியான மதிமுகவை சேர்ந்த மார்க்கெட் கணேசன் என்பவர் பேசும்போது, மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையும் கட்டுமான பணிகளுக்கு ரூ 24 கோடிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆனால் ரூ 15 கோடிக்கு மட்டும் பணி நடந்து கொண்டிருக்கிறது. பாதாள சாக்கடை திட்டத்தினை மறுசீரமைப்பதற்காக டெண்டர் கோரப்பட்டுள்ளது.

Read Also : ஓரிதழ் தாமரையின் பயன்கள்

Corruption in new bus stand
Corruption in new bus stand

இதற்கு தரமான கம்பெனியை பார்த்து செய்யச்சொல்லவும். என்றவாறு குற்றம் சாட்டி பேசினார்.இதற்கு பதிலளித்த பேசிய நகர்மன்ற தலைவர், தரமாக செய்யவேண்டுமென்றால் நீயே டெண்டர் எடுத்து செய்யவேண்டியதுதானே என்று ஒருமையில் பேசி பதிலளித்தார். அதற்கு பதிலளித்த மதிமுக கவுன்சிலர் என்னுடைய தகுதிக்கு சைக்கிள் ஸ்டாண்ட்டினை டெண்டர் எடுக்கலாம். உன்னைப்போல 2 கோடிக்கு நான் வேலை செய்வது கிடையாது என்று காரசாரமாக பதில் கூறினார்.

மேலும் நகராட்சியில் புதிய நகர் அமைப்பதில் சுமார் பல லட்சம் ரூபாய் பணமானது கைமாறியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள் என்று வார்டு கவுன்சிலர்கள் மிகவும் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்தனர். இதனால் நகர்மன்றத்தில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. இந்நிலையில் திமுகவை சேர்த்த நகர்மன்ற உறுப்பினர் ரஜினி பாதாள சாக்கடையின் காரணமாக பல்வேறு இடங்களில் சாக்கடை தண்ணீர் வழிந்து ஓடுவதாக குற்றம் சாட்டினார்.

நீங்கள் அடிக்கடி சிங்கப்பூர் சென்று வருகிறீர்கள் ஆகவேதான் சுகாதாரத்தை பற்றி பேசுகிறீர்கள். நம் ஊரை பற்றி பாருங்கள் என நக்கலாக பதில் கூறினார்.நகராட்சி ஆணையர் பேசியது நம்ம ஊரை திருத்தமுடியாது என்ற பேசியது பொதுமக்களை முகம் சுளிக்க செய்தது.ஊழல் சம்பந்தமாக கூச்சலும் குழப்பமும் நிலவிய நிலையில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Read Also : சுரைக்காயில் உள்ள மருத்துவ பயன்கள்..!

WhatsApp Channel Join Now
Youtube Channel Subscribe Now
Facebook Page Follow Now
Instagram Channel Join Now
-விளம்பரம்-
RELATED ARTICLES
-விளம்பரம்-

சமீபத்திய செய்திகள்

உடலில் இது போன்ற அறிகுறிகள் தெரியுதா? – இதுதான் காரணம்! டீ, காஃபியை எப்போது எப்படி குடிக்கலாம்? வைகாசி மாதத்தில் பிறந்தவர்களுடைய வாழ்க்கை ரகசியம் சுட்டெரிக்கும் வெயிலை தணிக்கும் சூப்பர் குளிர் பானங்கள் இளநீர் வாங்க போகும் முன் இதையெல்லாம் பாருங்க! தேவையற்ற கொழுப்பை குறைப்பதற்கு பூண்டை இப்படி சாப்பிடுங்க! குளிர்ந்த பால் குடிப்பதால் இத்தனை நன்மைகள் உண்டா? முருங்கை காய் ஒரு வாரம் ஆனாலும் ஃப்ரெஷ்ஷாக இருக்க டிப்ஸ்! வெள்ளை நிற உணவுகள் வேண்டாம்..அதற்கு பதிலாக இதை எடுத்துக்கோங்க! குதிகால் மென்மையாக இருக்க இதையெல்லாம் செய்யுங்க பருப்பில் வண்டு வராமல் இருக்க.. இதை try பண்ணுங்க! சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி ப்ரியா பற்றி உங்களுக்கு தெரியுமா? புதிய தொடரில் கமிட்டாகியுள்ள சைத்ரா ரெட்டி? ஒரு கைப்பிடி அளவு தர்ப்பூசணி விதைகள் தினமும் சாப்பிட்டால் உண்டாகும் நன்மைகள் இனிப்பு உணவுகள் சாப்பிடும் ஆசையை குறைக்கும் அருமையான ஜூஸ்கள் கொரியர்களை போல கண்ணாடி சருமம் பெற டிப்ஸ்! சிறகடிக்க ஆசை சீரியல் எடுத்த புதிய பரிமாணம்.. இந்திய அளவில் ட்ரெண்ட் ! வீட்டில் பணத்தை தங்கவைக்கும் 5 பொருட்கள் மஞ்சள் பாலின் ஆரோக்கிய நற்குணங்கள்! வணிகத்தில் வெற்றி பெற்று முன்னேறி வரும் டாப் 10 இந்திய பெண்மணிகள்..!!