வானிலைமாற்றங்களால் முடி உதிர்வு, பரம்பரையினால்உண்டாகும் முடி உதிர்வு, இரசாயன அடிப்படையிலான சிகிச்சைமுறை, மன அழுத்தம், அடிப்படை உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை உள்ளிட்ட பல காரணிகளால் முடி உதிர்தல் அடிக்கடி உண்டாகிறது.
Do you have hair loss
இருப்பினும், பெரும்பாலான மக்கள் திடீர் முடி உதிர்வதை சரி செய்வதற்கு ஒப்பனை சிகிச்சைகள் அல்லது வேதியல் அடிப்படையிலான தீர்வுகள் அல்லது சப்ளிமெண்ட்ஸைச் சார்ந்திருந்து இருக்கிறார்கள். ஆனால், முடி உதிர்வை மாற்றியமைப்பதற்கும், சரிசெய்வதற்கும் ஒரே வழி இதுதானா? சரி, இதோ ஒரு பழமையுள்ள பானம், இது இந்த முடிசம்பந்தமான நிலைகளை சரிசெய்யவும் மாற்றவும் உதவும்.
ஒரு எளிய கலவையை செய்து குடித்தால் முடி உதிர்வதை சரிசெய்ய முடியுமா?
ஆயுர்வேதத்தின் படி, 3 அத்தியாவசிய பொருட்களின் எளிய கலவையைச் சேர்ப்பது, இயற்கையாகவே திடீர் முடி உதிர்வதை சரிசெய்யவும், உங்கள் மெல்லிய முடியின் அமைப்பை மேம்படுத்துவதற்கும் உதவும்.
உண்மையில், நெல்லிக்காய், கறிவேப்பிலை மற்றும் இஞ்சி ஆகியவைகளினால் செய்யப்பட்ட இந்த குணப்படுத்தும் மருந்து முடி உதிர்வினை சரிசெய்வது மட்டுமன்றி, முடி உதிர்தல் பிரச்சனையை உள்ளிருந்து சரிசெய்யவும், மயிர்க்கால்களை மீண்டும் செயல்படுத்தவும் பயன்படுகிறது.
இந்த கலவையை உங்கள் உணவில் சேர்ப்பதன் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியவை எல்லாம் இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
இதையும் படிங்க : சங்கி என்பதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?
இந்த ஆயுர்வேத பானம் தயாரிக்கும் முறை?
இந்த ஆயுர்வேத முடி பானத்தை தயார் செய்ய, 2 புதிய நெல்லிக்காய், ஒரு கைப்பிடி புதிய கறிவேப்பிலை மற்றும் ஒரு சிறிய துண்டு இஞ்சி எடுத்துக் கொள்ளுங்கள்.
அவற்றை நீரில் கழுவி நறுக்கி, நெல்லிக்காய் விதையினை நீக்கிய பிறகு ஒரு பிளெண்டரில் சேர்க்கவும். ஒரு மென்மையான ஷாட் செய்து, ஒரு சிட்டிகை கருப்பு மிளகு (தேவைப்பட்டால்) சேர்க்கவும்.
இந்த ஆயுர்வேத பானத்தை நாள்தோரும் ஒரு முறை மட்டும் வெறும் வயிற்றில் குடிக்கவும். ஆனால் இந்த பானம் முடி மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு மிகவும் சிறந்தது.
கறிவேப்பிலை
கறிவேப்பிலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் ஏ, பி மற்றும் சி ஆகிய வைட்டமின்களும், முடி வளர்ச்சிக்கும் வலிமைக்கும் தேவையான கால்சியம் மற்றும் இரும்பு ஆகிய தாதுக்கள் அதிகமாக இருக்கிறது. அவை மயிர்க்கால்களை புத்துயிர் உண்டாக்கவும், முடி உதிர்வதைத் தடுப்பதற்கும், ஆரோக்கியமான, அடர்த்தியான முடியை மேம்படுத்தவும் பயன்படுகின்றன.
இஞ்சி
இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு மற்றும் தூண்டுதல் குணங்கள் உள்ளன. இது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த பயன்படுகிறது, இது மயிர்க்கால்களின் ஊட்டச்சத்திற்கு தேவையானது. இதில் அத்தியாவசிய எண்ணெய்கள், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் இருகின்றன, அவை தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு பயன்படுகின்றன, பொடுகு வராமல் தடுக்கிறது மற்றும் முடி வளர்ச்சியை கூடுதலாக்குகிறது.
நெல்லிக்காய்
நெல்லிக்காயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளன. இது உச்சந்தலையின் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. முன்கூட்டிய நரையைத் தடுப்பதிலும் மற்றும் முடி வளர்ச்சியைத் தூண்டுவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இது மயிர்க்கால்களை பலமடைய செய்கிறது மற்றும் முடி உடைவதைக் குறைகவும், ஒட்டுமொத்த முடி ஆரோக்கியத்தை உயர்த்துகிறது.
இறுதிக்குறிப்பு
இந்த ஆயுர்வேத பானத்தை குடிப்பதால் முடி உதிர்வதை சரிசெய்வது மட்டுமன்றி, இந்த கலவையை மேலே பூசினால் உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பயன்படுகிறது. ஏனெனில் இந்த பானத்தில் பயன்படுத்தப்படும் எல்லா பொருட்களும் முடி வளர்சியை ஊக்குவிக்க பயன்படுகிறது மற்றும் திடீர் முடி உதிர்வினை தடுக்கிறது.
இருப்பினும், முடிவுகளை தெரிந்துகொள்ள இந்த பானத்தை தொடர்ந்து குடிப்பது முக்கியம். அதிகப்படியான முடி உதிர்வு உண்டானால், மருத்துவ ஆலோசனையைப்பெற்றுக்கொள்வது சிறந்தது. பின்னர் இந்த பானங்களை உணவில் சேர்த்து சாப்பிடுவதும் நல்லது.
For More Tips Click Here