மனிதன் என்றால் உறங்குவது இயல்பானது. தூங்கும்போது கனவுகள் காண்பதும் இயல்பானவையே ஆனால், கனவில் வரும் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் ஒவ்வொரு பலன்கள் உண்டு. கனவுகள் என்றாலே நம் ஆழ் மனதில் இருப்பவைகளும் கனவாக வரும். சில நேரங்களில் நம் வாழ்க்கையில் நமக்கு நடக்க போகும் விளைவுகளை முன்கூட்டியே உணர்த்துவதற்காகவும் கனவுகள் பிரதிபலிக்கின்றன.
அதுமட்டுமில்லாமல் எதிர்காலத்த்தில் நமக்கு நடக்க போகும் தீமைகளிலுருந்து நம்மை பாதுகாத்து கொள்வதற்காகவும் கனவுகள் தோன்றுகின்றன. அப்படி கனவில் தோன்றும் ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரு பலன் உண்டு. அதே போல் எருக்கன் பூ கனவில் கண்டால் என்ன பலன் என்பதனை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
எருக்கம் பூ கனவில் வந்தால் : erukkam poo kanavil vanthal
எருக்கம் பூவிலே 2 வகையான செடிகள் இருக்கிறது . ஒன்று வெள்ளை வண்ண பூக்கள் பூக்கும் எருக்கன் செடி. மற்றொரு எருக்கன் பூ வெள்ளையும் நீலமும் லைட்டாக பிங்க் கலர் கலந்து பூக்கும் செடி. இவையில் ஒவ்வொன்றுக்கும் தனி தனி பலன்கள் உண்டு. அவற்றை கீழே பார்ப்போம்.
குழந்தை விஷயத்தில் எடுத்த முடிவு? ஆச்சர்யத்தில் சமந்தா ரசிகர்கள்
வெள்ளை கலர் பூக்கள் பூக்கும் எருக்கன் செடியை கனவில் வந்தால் :
விநாயக பெருமானுக்கு வெள்ளை நிற எருக்கன் பூ உகந்தது. உங்கள் ஊரில் இருக்கும் அரச மரத்தில் உள்ள பிள்ளையார்களுக்குக்கூட இந்த வெள்ளை நிற எருக்கன் பூவை வைப்பதை பார்த்திருக்கலாம். வெள்ளை நிற எருக்கன் பூவை கனவில் வந்தால் உங்கள் வாழ்வில் முன்னேற்றங்கள் அடைய போகிறீர்கள் என்று அர்த்தம்.
இதற்கு முன்னால் உங்கள் வாழ்வில் பல சோதனைகளையும் கஷ்டங்களையும் அனுபவித்திருப்பீர்கள். இந்த வெள்ளை வண்ண எருக்கன் பூ கனவில் வருவது இதன் பிறகு உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய போவதை உணர்த்துகிறது. அதனால் விநாயகருக்கு உகந்த வெள்ளை வண்ண எருக்கன் பூவை விநாயகர் கோவிலுக்கு போய் விளக்கு ஏற்றி இந்த பூவையும் வைத்து வழிபட்டு வரலாம்.
நீல நிறத்தில் பூக்கும் எருக்கன் பூ கனவில் வந்தால் : erukkam poo kanavil vanthal
சிவனுக்கு உகந்த பூக்களாக நீல நிறத்தில் பூக்கும் எருக்கன் பூ கருதப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் வட மாநிலங்களிலும் இந்த நீல நிற எருக்கன் பூக்களை சிவனுக்கு அனுகூலமான நாட்களில் வைத்து வழிபடுகிறார்கள். இந்த நீல நிறத்தில் பூக்கும் எருக்கன் பூ கனவில் வந்தால் உங்களுக்கு ஏதோ உடல் பிரச்சனைகள் வர போவதை குறிக்கிறது. உடனே உங்கள் கனவை நினைத்து பயப்பட வேண்டாம்.
கனவு உணர்த்துவதால் முன்கூட்டியே நீங்கள் உங்களை கவனித்து சரி செய்து கொள்ள முடியும். நீங்கள் சிவன்பெருமான் ஆலயத்திற்கு சென்று விளக்கு ஏற்றியோ அல்லது அர்ச்சனை செய்தோ வழிபடலாம். பிரதோஷங்களில் பங்கேற்று பிரதோஷத்திற்கு தேவையான அர்ச்சனை சாமான்களை வாங்கி கொடுக்கலாம். இதனால் சிறந்த பலன்களை பெற முடியும் உங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அது தானாகவே சரியாகி விவிடும்.