Etukkudi Murugan Temple : புத்தாண்டை முன்னிட்டு புகழ் வாய்ந்த எட்டுக்குடி முருகன் கோயிலில் நீண்ட வரிசையில் பக்தர்கள் தரிசனம்.
Etukkudi Murugan Temple
ஆங்கில புதுவருடத்தை கொண்டாடும் வகையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் காலை முதலே சிறப்பு அபிழேகமும் ஆராதனையும் நடந்து வருகிறது. அதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றுகொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் திருகுவளையை அடுத்த எட்டுக்குடி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சிறப்பு அபிழேகம் நடைபெற்றது. இதில் பங்கேற்க காலையிலிருந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
Read Also : 2023 January Month Whatsapp Status in Tamil
மேலும், முருகப்பெருமான் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். புத்தாண்டை முன்னிட்டு சுப்பிரமணிய சாமிக்கு பால்,பன்னீர், தயிர்,சந்தனம், மஞ்சள் தூள்,பதினான்கு வகையான திரவிய பொடிகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
முருக பெருமான் வள்ளி தெய்வானைக்கு வண்ண மலர் கொண்டு அலங்கராம் செய்யப்பட்டு மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்கள்.
Read Also : இரவில் நன்றாக தூங்க எளிய வழிகள்