Farmers want to open water : நாகை அருகே அருந்தவம்புலத்தில் சம்பா தாளடிபயிர் சாகுபடியை காப்பாற்ற மேட்டூரில் பிப்ரவரி வரை தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
நாகை மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் ஹெக்டர் பரப்பளவில் சம்பா தாளடி பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பா தாளடி சாகுபடிக்கு தண்ணீர் இல்லாமல் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் காய்ந்து வருவதாக தொடர்ந்து விவசாயிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
Read Also : வீட்டில் வெற்றிலை வளர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா..!
அதன்படி மேட்டூரிலிருந்து பிப்ரவரி 15ஆம் தேதி வரை தண்ணீர் திறந்து விடக் கோரியும், குறுவை பயிர் பாதிப்பிற்கு அரசு அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க கோரியும் வேதாரண்யம் வட்டம் அருந்தவம்புலம் கடைத்தெருவில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.