Guru Puja Festival of Thiruvavaduthurai Atheenaam : பழமை வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனத்தின் குரு முதல்வர் குரு பூஜையின் முக்கிய நிகழ்ச்சியான பட்டினப்பிரவேசம், சிவிகை பல்லக்கில் பாரம்பரிய முறைப்படி ஆதீன மடாதிபதியை சுமந்து சென்ற பக்தர்கள்:-
Guru Puja Festival of Thiruvavaduthurai Atheenaam
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே 13ம் நூற்றாண்டை சேர்ந்த திருவாவடுதுறை ஆதீன சைவ மடம் அமைந்திருக்கிறது. ஆதீனத்தை தோற்றுவித்த குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்திகள் குருபூசை விழா அவர் அவதரித்த தை மாதம் அசுபதி நட்சத்திர தினத்தில் கொண்டாடுவது வழக்கம். இதற்கான விழா கடந்த 9ஆம் தேதி ஆதீனத்தில் கொடியேற்றப்பட்டது. அதன் பின் குரு பூஜை விழா துவங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான பட்டினப்பிரவேசம் 18/01/2024 அன்று இரவு துவங்கி 19/01/2024 அதிகாலை வரை விடிய விடிய நடைபெற்றது
Read Also : நவரச நாயகன் கார்த்திக்கு இரண்டு மனைவி?
இதற்காக ஆதீன 24வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் தனது சீடர்களுடன் குளு மண்டபத்திற்கு எழுந்தருளினார். அதனை தொடர்ந்து 40-க்கும் மேற்பட்ட தவில் வித்வான்கள், நாதஸ்வர வித்வான்கள் மங்கள வாத்தியங்களை முழங்க வாண வேடிக்கைகளுடன், யானை, குதிரைகள் இவற்றுடன் பட்டினப்பிரவேச சிவிகை பல்லக்கு நடைபெற்றது.
ஆதீன குரு மகா சன்னிதானத்தை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பக்தர்கள் பாரம்பரிய முறைப்படி திருவாவடுதுறை ஆதீனத்தின் முக்கிய வீதிகள் வழியே சுமந்து சென்றனர். தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பல்வேறு ஆதீனம் மடாதிபதிகள், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நிகழ்ச்சியில்கலந்துகொண்டனர்.