How to Prevent pimples naturally : சருமத்தில் ஏற்படும் மிக முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று முகப்பருக்கள் ஆகும். இந்த பிரச்சனையை பார்க்காதவர்கள் இருக்கவே முடியாது. ஆனால் நாம் பருக்களை கையாளும் விதம் அதனை குணப்படுத்துவதற்கு பதிலாக பெரும்பாலும் அதனை பெரிதாக்கும் வேலையைத்தான் செய்கிறோம்.
பருக்கள் வந்தால் அதனை விரல்களால் கிள்ளுவது அல்லது அழுத்துவது நாம் செய்யும் மிக பெரிய தவறாகும். இது பருக்களுக்கு உடனடி தீர்வாக தோன்றலாம். அனல் இது சரியானது இல்லை. நீங்கள் அதை கிள்ளுவதால் துளைகள் உருவாகும். அதனால் விளைவுகள் மோசமாகலாம்.
பருக்களுக்குள் இருக்கும் பொருட்கள் சருமத்திற்குள் ஆழமாக சென்று சிவந்து மேலும் முகத்தை வீக்கமடைய செய்யும். இது புதிய பருக்களை உருவாக்கலாம் அல்லது பருக்களை மோசமாக்கலாம்.
“பிம்பிள் பாப்பிங்” என்றால் என்ன? | How to Prevent pimples naturally
“பிம்பிள் பாப்பிங்” என்றால் ஒரு பருவினை கையால் கிள்ளுவதும் அல்லது வேறு விதமாக கையாள்வதும் குறிக்கிறது. இந்த நடைமுறை பெருபாலும் பிற கருவிகள் அல்லது விரல்களை கொண்டு செய்யப்படுகிறது. பொதுவாக முகப்பருவின் தோற்றத்தை அகற்ற அல்லது குறைக்கும் விருப்பம் இருந்தால் இது செய்யப்படுகிறது. இது உடனடி நிவாரணத்தை வழங்கினாலும் பலவேறு மோசமான விளைவுகளை உண்டாக்கும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
வெள்ளை உள்ளடக்கம் இல்லாத பரு வந்தால், அது உங்களுடைய சருமத்தை உடைத்து, தொற்று நோயினை உண்டாக்கி, அதை சுற்றியுள்ள தோலுக்கு பாதிப்பினை உண்டாகும். உங்கள் பருக்களை அழுத்திக்கொண்டே இருந்தால், கட்டிகள் அல்லது நீர்கட்டிகள் போன்று அவை பெரிதாகி பின் விளைவுகள் ஏற்படுத்தலாம்.
Read Also : பற்களில் மஞ்சள் கரை போக வீட்டு வைத்தியம்
பருக்கள் உங்களுக்கு தோன்றி, உங்களுடைய தோலை காயப்படுத்தினால், அது குணமாகும் போது சில திசுக்களை இழக்க வாய்ப்புகள் நேரிடும். இதிலிருந்து அந்த இடத்தில வடுக்களை பெறலாம். வீக்கத்தின் காரணமாக, தழும்புகள் இல்லை என்றாலும் கரும்புள்ளிகள் தோன்றக்கூடும்.
உங்கள் நகங்களை அல்லது வேறு பொருட்களை கொண்டும் பருக்களை அமுக்காதீர்கள். மஞ்சள் அல்லது வெள்ளை நிற பொருட்கள் இல்லாவிட்டால், பருக்களை அழுத்தி அதை வெளியேற்ற வேண்டாம்.
பருக்களை அழுத்த வேண்டாம்,உங்கள் பருக்கள் மீது காய் வைக்காமல் கடையில் கிடைக்கும் பொருட்கள் அல்லது மருந்துகள் பயன்படுத்தி பருக்களை போக்கலாம். சில பருக்களை நீக்குவது கடினம், அந்த சூழ்நிலையில் தோல் மருத்துவரை அணுக வேண்டும். மற்றும் பருக்களை குணப்படுவதற்கு சில வீட்டு வைத்தியங்களையும் செய்து பார்க்கலாம்.
எலுமிச்சை சாறுடன் கற்றாழை :
2014 ஆம் வருடம் வெளியிடப்பட்ட ஜர்னல் ஆஃப் டெர்மட்டாலஜிக்கல் ட்ரீட்மென்ட்டில் ஒரு ஆய்வு, கற்றாழையின் பாக்டீரியா எதிப்பு பண்புகள் பாக்டீரியாவை குறைக்க உதவுகிறது என்று கூறுகிறது.
சருமத்தில் கற்றாழையை தடவும் போது, அது குளிர்ச்சியாகவும், இனிமையானதாகவும் இருக்கும். இதனால் பருக்களால் ஏற்படும் வீக்கம் மற்றும் சிவத்தல் இவற்றை கட்டுப்படுத்தும். ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறுடன்புதிதாக ஸ்கூப் செய்யப்பட்ட கற்றாழை ஜெல்லினை கலக்கவும். அந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி கொண்டு, 15 நிமிடங்கள் கழித்து கழுவவும்.
Watch Video : நீங்கள் மறுபடியும் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இருக்கா?
தயிர் மற்றும் ஈஸ்ட் :
நீங்கள் முகப்பரு அல்லது எண்ணெய் சருமத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், தயிர் மற்றும் ஈஸ்ட் மாஸ்க் உங்களுக்கு நல்ல பலனை தரும். பருக்கள் இல்லாமலும், பளபளப்பான சருமத்திற்கு இது சரியான தீர்வாகும். இயற்கையாகவே ஈஸ்ட்டானது சருமத்தை சுத்திகரிக்கும் பண்பை கொண்டுள்ளது. மேலும் தயிரில் இருக்கிற பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளுடன் இணைந்து பருக்களை குறைக்கும்.
அரை ஸ்பூன் தயிருடன் அரை டீ ஸ்பூன் உடனடி ஈஸ்ட்டை சேர்த்து கலக்கவும். இதனை உங்கள் முகத்திலும் மற்றும் கழுத்திலும் தடவி, 20 பது நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். பின்பு வெதுவெதுப்பான நீரில் உங்கள் முகத்தை கழுவவும் மற்றும் வழக்கம் போன்று ஈரப்படுத்தவும்.
தேன் மற்றும் மஞ்சள்:
நம் அனைவருக்கும் மஞ்சள் சருமத்தை நன்றாக வைத்திருக்கும் என்று அனைவரும் அறிந்ததே. ஆனால் முகப்பருவிற்கும் மஞ்சள் ஒரு சிறந்த மருந்து என்பது உங்களுக்கு தெரியுமா? மஞ்சளில் உள்ள பாலிபினால்கள் மற்றும் குர்குமின் ஆகியன முகப்பரு போன்ற அழற்சி நிலைகளை குணப்படுத்த சிறந்தவை.
1/2 டீ ஸ்பூன் மஞ்சளுடன் 2 டீ ஸ்பூன் கடலை மாவு மற்றும் 2 டீ ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும். அது பேஸ்டாக உருவாகிவிடும், அதை உங்கள் முகத்தில் தடவவும், பின்பு 10 முதல் 12 நிமிடங்கள் வைத்திருக்கவும். அதன்பின்பு முகத்தை நன்றாக கழுவுங்கள்.
முட்டையின் வெள்ளைக்கரு:
முட்டையின் வெள்ளை நிற மாஸ்க்கை பயன்படுத்தினால் அதில் பல நன்மைகள் இருக்கிறது. அதில் புரதங்கள் மற்றும் வைட்டமின்கள் நிரம்பியுள்ளது.மேலும் சரும உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது. இதனால் சருமத்தில் இருக்கும் எண்ணெய் பசையை குறைகிறது. முகத்தில் குறைவான எண்ணெய் பசை இருப்பது பருக்கள் தோன்றுவதை தடுக்கும்.