Human Rights Awareness Meeting : பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமூக நீதி மற்றும் மனித உரிமை பற்றிய விழிப்புணர்வு கூட்டத்தை காவல்துறை சார்பில் நடத்தப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தனியார் திருமண மண்டபத்தில் சமூக நீதி மற்றும் மனித உரிமை பற்றிய விழிப்புணர்வு கூட்டம் காவல் துறையினர் மூலம் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா தலைமையில் நடத்தப்பட்டது.
Read Also : பெண்களுக்கு அதிகரிக்கும் இரும்பு சத்து குறைபாடுகளை தடுக்கும் 5 உணவுகள்
இந்நிகழ்வில் காவல் துணை கண்காணிப்பாளர் கலை கதிரவன் முன்னிலையிலும் சிறப்பு பேச்சாளராக ஆசிரியர் திருநாவுக்கரசு சிறப்புரையாற்றினார். இதில் மயிலாடுதுறை மணல்மேடு செம்பனார்கோவில் காவல் நிலைய ஆய்வாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.