இரவில் தூங்கும்போது விளக்குகளை எரிய விடுவது உங்கள் சர்க்காடியன் தாளத்தை சீர்குலைத்து, நீரிழிவு அபாயத்தை அதிகரிக்க செய்யும் என்று சொல்லப்படுகிறது. இன்று நம்மில் பலருக்கும், ஏதோ ஒரு செயற்கையின் வெளிச்சத்தின் ஒளிர்வின் ஊடே தூங்கும் நிலை தான் இருக்கிறது.
அந்த வெளிச்சம் இரவு விளக்கிலிருந்தோ, ஸ்மார்ட் போனிலிருந்தோ, தொலைக்காட்சிப் பெட்டியிலிருந்தோ அல்லது வெளியிலிருந்து வீட்டினுள் கசியும் ஸ்ட்ரீட் லைட்டிலிருந்தோ வெளிப்படலாம்.
மிதமான ஒளியுடன் ஒரு இரவு தூங்கினாலும் கூட, அதனால் நம்முடைய இதயமும், உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்ற நிகழ்வும் பாதகமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை இன்றைய விஞ்ஞானம் வலியுறுத்துகிறது. அதாவது, மிதமான வெளிச்சம், மிகச் சிறிதளவு கண்களின் வழியே மூளைக்கு சென்றாலும்கூட, அதனால் நம்முடைய உடலுக்கு மிகப் பெரிய அளவில் கேடுகள் விளைவிக்கக்கூடும்.
இதய பாதிப்புகள்
வெளிச்சத்தில் உறங்குவது ஹார்மோன்கள் சமநிலையின்மையை ஏற்படுத்தாமல் இதய பாதிப்புகளையும் உண்டாக்கலாம். அண்மைய ஆய்வின்படி வெளிச்சத்தில் உறங்குவது இருட்டில் உறங்குவது போன்று அமைதியான உறக்கமாக இருக்காது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே இதுபோன்று ஓய்வின்றி தூங்குவது இரத்த அழுத்தத்தை கூடுதலாக்கும். இதனால் இதய பாதிப்புகள் உண்டாகலாம்.
மனஅழுத்தம்
பயம் காரணமாக விளக்கிற்கு அருகிலோ அல்லது வெளிச்சத்திலோ தூங்குவது உங்கள் மனஅழுத்தத்தை குறைக்கும் என்று நீங்கள் கருதினால் அது தவறு. வெளிச்சத்தில் தூங்குவது உங்கள் தூக்கத்தின் தரத்தை பாதிக்க செய்யும். இது மூளையில் பாதிப்பை உண்டாக்கும். இது உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் மூளையின் அமைப்பில் பாதிப்பினை உண்டாக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் வெளிச்சத்தில் தூங்குவது கேன்சர் வரும் என்ற அதிர்ச்சிகரமான தகவல் அண்மையில் மருத்துவர்களால் கண்டறியப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : விஜய் உடன் இருக்கும் இவர் யார் தெரியுமா?
வெளிச்சம்
ஒருவேளை உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்கள் இருளை பார்த்து பயபடுபவர்களாக இருந்தால் அவர்களுக்கு மட்டும் தேவையென்றால் ஒரு சிறிய ரெட் லைட்டை எரிய விடுங்கள். மற்ற கலர் விளக்குகளை காட்டிலும் ரெட் கலர் விளக்கால் உண்டாகும் பாதிப்புகள் குறைவாக இருக்கும்.
நமது உயிரியல் பகல் மற்றும் இரவில் ஒளி எவ்வாறு பாதிக்கிறது
ஒளி நமது விழித்திரைக்கு வரும் போது, புற மற்றும் மத்திய நரம்பு மண்டலங்களை ஒன்று இணைக்கும் மாஸ்டர் கடிகாரம் உள்ள நமது மூளையின் பகுதிக்கு ஆப்டிகல் நரம்புகள் மூலம் செயல் திறன்களை சென்றடைய செய்கிறது.
நாம் விழித்தெழுந்து வெளிச்சத்திற்கு வரும் போது, அது சீரம் கார்டிசோல் லெவல்களில் குறிப்பிடத்தக்க தற்காலிக அதிகரிப்பைத் தூண்ட செய்யும், இது கார்டிசோல் விழித்தெழுதல் பதில் என அழைக்கப்படுகிறது..
இது நாள் ஆரம்பித்ததை நம் உடலுக்கு சமிக்ஞை பண்ணுகிறது. மறுபுறம், சூரிய அஸ்தமனத்தின் போது பகல் ஒளி மங்குவதால், பினியல் சுரப்பியில் இருந்து மெலடோனின் சுரப்பு கூடுதலாகிறது, இது உயிரியல் இரவின் ஆரம்பத்தைக் குறிக்கிறது.
இரவு வெளிச்சம் நீரிழிவு நோயை எவ்வாறு உண்டாக்குகிறது?
லான்செட் ஆய்வு மாலை மற்றும் நைட்டில் செயற்கை ஒளி இந்த இயற்கை செயல்முறைகளில் குறுக்கிடலாம் என்று கண்டறிய பட்டுள்ளது. இந்த இடையூறு வருவதால் மெலடோனின் சுரப்பை அடக்குகிறது மற்றும் உடல் பருமன், வகை 2 நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகிய நிலைமைகளின் அதிக ஆபத்துகளுடன் தொடர்பு உடையது, குறிப்பாக இரவில் அதிக நேரம் வெளிச்சத்தில் இருப்பது.
படுக்கைக்கு போகும் போது விளக்கை நிறுத்த வேண்டுமா?
லான்செட் ஆய்வு பகல் வெளிச்சத்தை அதிகரிப்பது, இரவு நேர ஒளி வெளிப்பாட்டைக் குறைப்பது மற்றும் வழக்கமான ஒளி வெளிப்பாடு வடிவங்களைப் பராமரிப்பது உள்ளிட்டவை வகை 2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைப்பதற்கு பயனுள்ள உத்திகளாக இருக்கலாம் என்று சொல்கிறது. இருப்பினும், இந்த கண்டுபிடிப்புகளை அனைவருக்கும் பொதுவாக்க முடியாது. ஏனென்றால், நாம் ஒவ்வொருவரும் ஒளியின் மீது சமமாக உணர்திறன் உடையவர்கள் அல்ல. கூடுதலாக தூக்க முகமூடிகள், நீல ஒளி-தடுக்கும் கண்ணாடிகள் அல்லது நள்ளிரவு சிற்றுண்டி உள்ளிட்ட காரணிகளை ஆய்வு இன்னும் கருத்தில் கொள்ளவில்லை.
சிறந்த ஒளி சுகாதாரத்தை மேம்பட செய்வது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சுலபமான மற்றும் பயனுள்ளதாக இருக்கலாம். சிறந்த ஆரோக்கியத்திற்கான தேடலில் விட்டுத்தருவது அதிகம் இல்லை..
இதையும் படிங்க : சத்தான சிறுதானிய முருங்கை கீரை அடை..
இருட்டில் தூங்குவதால் உண்டாகும் நன்மைகள்
ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் முக்கியமான ஒருங்கிணைந்த பகுதியாக போதுமான தூக்கம் இருக்கிறது. ஆனால் பல காரணிகள் போதுமான தூக்கத்தைத் தடுக்கலாம் மற்றும் தூக்கமின்மைக்கு வழி செய்யும். இருளில் தூங்குவது சிறந்த தூக்கத்தின் தரத்தை ஊக்குவிக்கும் ஒரு சிறந்த வழியாகும். பிரகாசமான விளக்குகளை எறிய செய்து தூங்குவதை விட, மங்கலான வெளிச்சத்தில் உறங்குவது மிகவும் நிம்மதியானது என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன. ஒரு இருண்ட சூழல் மனதில் அமைதியான விளைவை கொடுக்கும், மேலும் பதட்ட உணர்வுகளை மற்றும் மன அழுத்தத்தை விடுவிக்கும்.