Keezha Mariamman Kumbabhishekam : மயிலாடுதுறை அருகே கீழ மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் 14 வருடங்களுக்குப் பிறகு மிக சிறப்பாக நடைபெற்றது :-
மயிலாடுதுறை அருகே ஆறுபாதி ஊராட்சியில் விளநகர் பகுதியில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயிலை சேர்ந்த கீழ மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தில் திருப்பணிகள் செய்யப்பட்டு 14 ஆண்டுகளுக்குப் பிறகு மஹா கும்பாபிஷேகம் 23/01/2024 வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு அனுக்ஞை மற்றும் விக்னேஸ்வர பூஜை உடன் சிறப்பு யாகங்கள் கடந்த 20 ம் தேதி தொடங்கிய யாகசாலை பூஜைகள் 23/01/2024 லில் நிறைவுற்று மஹா பூர்ணாகுதி நடைபெற்றது. பின்னர் மேள வாத்தியங்கள் முழங்க யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கடங்கள் ஊர்வலமாக கோயிலை சுற்றி வந்து கோபுர கலசத்திற்கு வந்தடைந்தது.
Read Also : திருவாவடுதுறை ஆதீனத்தின் குரு முதல்வர் குருபூஜை விழா
அதன் பிறகு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.