Kilvelur DMK is proud : முதலமைச்சர் அவர்கள் அறிவித்த திட்டத்தில் அனைத்து கட்சியினரும் ஏதாவது ஒரு திட்டத்தில் கண்டிப்பாக பயன் அடைந்திருப்பார்கள்: கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி திமுக BLA இரண்டு பாகநிலை முகவர் மற்றும் பூத் ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் திமுகவினர் பெருமிதம்;
Kilvelur DMK is proud
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் இருக்கும் தனியார் திருமண மண்டபத்தில் இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் ஒலிக்கட்டும் பிரச்சாரம் சம்பந்தமான 164- நாகை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் BLA 2 மற்றும் பூத் ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனைக்கூட்டம் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தலைவரும், நாகை மாவட்ட திமுக செயலாளர் என்.கௌதமன் தலைமையில் நடைப்பெற்றது. ஒன்றிய அரசு போதிய நிதி வழங்காமலும் சிறப்பாக முதலமைச்சர் திட்டங்களை வகுத்து பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார் திமுக அறிவித்த திட்டத்தில் அனைத்து கட்சியினரும் ஏதோ ஒரு திட்டத்தில் கட்டாயம் பயன் பெற்றிருப்பார்கள் எனவே முகவர்கள் அதனை வாக்காளர்களிடம் தெரிவித்து வாக்கு சேகரிக்கலாம்
இதையும் படிங்க : பெயரை பார்த்து ராசி கண்டுபிடிப்பது எப்படி.?
இந்த நிகழ்வில் கீழ்வேளூர் சட்ட மன்ற தொகுதி பார்வையாளர் கே. ஆர்.என்.போஸ் ஆகியோர் பங்கேற்று 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாகநிலை முகவர்கள் 2 செய்ய வேண்டிய வேலைகள் குறித்தும் மக்களுக்கு திமுக அரசு செய்த சாதனைகளை கிராமம் வாரியாக கொண்டு செல்ல வேண்டும் என பேசினர்.
இக்கூட்டத்தில் மாநில மீனவரணி துணை செயலாளர் மனோகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் இல.மேகநாதன், கீழையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மலர்வண்ணன், கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன், கீழ்வேளூர் ஒன்றிய செயலாளர் கோவிந்தராசன், பழனியப்பன், நாகை வடக்கு ஒன்றிய செயலாளர் வடவூர் ராஜேந்திரன், வேளாங்கண்ணி பேரூர் செயலாளர் மரிய சார்லி,தலைஞாயிறு ஒன்றியக்குழு தலைவர் ஆர்.ஜி.தமிழரசி ,பொதுக்குழு உறுப்பினர்கள் இல.பழனியப்பன், கோசி.குமார், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க : கார்ன் ஃப்ரை செய்வது எப்படி..?