இளந்தோப்பு ஸ்ரீ சீதளா மகா மாரியம்மன் கோயில் மகா கும்பாபிசேகம். திரளான பக்தர்கள் பங்கேற்று கண்டு களித்தனர்.
Maha Mariamman Maha Kumbaphisekam
மயிலாடுதுறை மாவட்டம். பட்டவர்த்தி அடுத்த இளந்தோப்பு கிராமத்தில் ஸ்ரீ சீதளா மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் மிகவும் பழைமையானது. இந்த ஆலய மகா கும்பாபிசேகம் 28/04/24 லில் மிக சிறப்பாக நடைபெற்றது.
இதையும் படிங்க : ட்ரௌட் மீன் என்றால் என்ன? அதில் உள்ள சத்துக்கள் மற்றும் பயன்கள்
இந்த கும்பாபிசேகத்தையொட்டி யாகசாலை அமைக்கபட்டு, புனித நீர் கடங்களை வைத்து வேத விற் பன்னர்களால் 2 கால யாக பூஜை நடத்தப்பட்டு பூர்ணாகுதி நடைபெற்றது. அதன் பின், மேள தாளம் வாண வேடிக்கையுடன் வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓதி, புனித நீர் கடங்களை தலையில் சுமந்து சென்று விமான கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிசேகமானது மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இக் கும்பாபிசேகத்தை ஏராளமான பக்தர்களும், கிராம மக்களும் கும்பாபிசேகத்தை கண்டு களித்தனர்.
இதையும் படிங்க : சுவையாக எலுமிச்சை சாதம் செய்வது எப்படி ?