Mannambandal 2 new ration shop : மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஊராட்சியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள இரண்டு நியாயவிலைக் கடைகளின் கட்டடங்களை எம்எல்ஏ ராஜகுமார் திறந்து வைத்தார்
மயிலாடுதுறை மன்னம்பந்தலில் கிராம மக்கள் இருவேறு பகுதிகளில் நியாயவிலைக்கடைகள் கட்டித்தர தொடர் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ஊராட்சி அலுவலகம் அருகில் ரூ.9.16 லட்சம் மதிப்பீட்டில் பகுதிநேர அங்காடி மற்றும் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் நியாயவிலை அங்காடி ஆகிய இரண்டு நியாயவிலை கடைகளுக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.
இதையும் படிங்க : அருள்மிகு அழகு அய்யனார் கோயில் மகா குடமுழுக்கு விழா
ஊராட்சித் தலைவர் பிரியா பெரியசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராஜகுமார் பங்கேற்று நியாய விலைக்கடைக் கட்டடங்களை திறந்து வைத்து பேசினார். மாவட்டக்குழு உறுப்பினர் குமாரசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க : பால் பொங்கி வழியாமல் இருக்க இதை செய்து பாருங்க !