Welcome to V Tamil Tv ..... VTamilTv.com என்பது பொதுமக்களுக்கு பயன் உள்ள தகவல் மற்றும் பொழுதுபோக்கு, லைப்ஸ்டைல், அழகு குறிப்பு, உடல் நலம் ஆரோக்கியம் குறித்த தகவல்கள் வழங்கும் இணையதளம் ஆகும்.

5 லட்சம் கரும்புகளை அரசு கூட்டுறவு துறை மூலமாக நேரடியாக கொள்முதல் செய்ய கோரிக்கை

Published :
-விளம்பரம்-

Mayiladuthurai sugarcane : மயிலாடுதுறை மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருக்கும் 5 லட்சம் கரும்புகளை அரசு கூட்டுறவு துறை மூலமாக நேரடியாக கொள்முதல் செய்ய கோரிக்கை, இதுவரை அரசு அறிவிப்பு வெளியிடாததால் விவசாயிகள் கலக்கம்:

இந்த வருடம் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த வானதிராஜபுரம் கடலங்குடி சீர்காழி அருகே செம்பதனிருப்பு, காத்திருப்பு, ராதாநல்லூர், அல்லிவிளாகம் போன்ற பல்வேறு கிராமங்களில் சுமார் 200 ஏக்கரில் ஐந்து லட்சம் பொங்கல் கரும்புகள் பயிரடப்பட்டுள்ளது.

கரும்பானது மிகவும் நன்றாக விளைந்து அறுவடைக்கு தயாராக இருக்கிறது. வருடந்தோறும் உரங்களின் விலை, ஆட்களின் சம்பளம் என்று ஏக்கருக்கு 1 லட்சம் ரூபாய் செலவு செய்திருந்த நிலையில் பொங்கலுக்கு இன்னும் சில தினங்கள் உள்ள நிலையில் பொங்கல் பரிசுக்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு கரும்பு வழங்குவது வழக்கம் அது குறித்து அரசாங்கம் சார்பில் எந்தவித அரசாணையும் வெளியிடவில்லை.

Mayiladuthurai sugarcane
Mayiladuthurai sugarcane

பொங்கலுக்கு அரசு சார்பில் கரும்பு கொள்முதல் செய்வது பற்றி எந்த அறிவிப்பும் செய்யப்படாதது விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் பொங்கல் தொகுப்பு திட்டத்தில் விவசாயிகளிடமிருந்து கரும்பை வாங்கி குடும்ப கார்டுதாரர்களுக்கு கரும்பு கொடுக்கப்பட்டது.

Watch Video : முடி பராமரிப்பில் உதவும் வெண்டைக்காய் எப்படி?

Mayiladuthurai sugarcane : நேரடியாக கொள்முதல் செய்ய கோரிக்கை

இதற்காக 33 ரூபாய் ஒரு கரும்புக்கு விலை நிர்ணயம் செய்த நிலையில், திமுக இடைத்தரகர்கள் கருப்பு ஒன்றுக்கு 15 ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு கமிஷனாக மீதமுள்ள தொகையை வாங்கி சென்றார்கள். வானதிராஜபுரம் பகுதி விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அந்த பகுதியை புறக்கணித்து அங்கு கரும்பு கொள்முதல் செய்யவில்லை.

இதற்காக தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள் .இந்நிலையில் இந்த வருடமாவது தங்களிடம் கரும்பை உரிய விலை கொடுத்து கொள்முதல் செய்யவேண்டும். என்று கோரிக்கை விடுத்தார்கள். இந்த வருடம் இடைத்தரகர்கள் மூலம் கரும்பினை கொள்முதல் செய்யாமல் அரசாங்கம் கூட்டுறவு சங்கம் மூலமாக நேரிடையாக கொள்முதல் செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசாங்கம் கொள்முதல் செய்யவில்லை என்றால் இந்த வருடம் கரும்பு விலை மிகவும் வீழ்ச்சி அடைந்துவிடும். விவசாயிகளுக்கு இந்த வருடம் பெரும் நஷ்டம் உண்டாகும் என்று வேதனை தெரிவித்துள்ளனர்.

Read Also : தேமுதிக கட்சியின் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் காலமானார் …

WhatsApp Channel Join Now
Youtube Channel Subscribe Now
Facebook Page Follow Now
Instagram Channel Join Now
-விளம்பரம்-
RELATED ARTICLES
-விளம்பரம்-

சமீபத்திய செய்திகள்

உடலில் இது போன்ற அறிகுறிகள் தெரியுதா? – இதுதான் காரணம்! டீ, காஃபியை எப்போது எப்படி குடிக்கலாம்? வைகாசி மாதத்தில் பிறந்தவர்களுடைய வாழ்க்கை ரகசியம் சுட்டெரிக்கும் வெயிலை தணிக்கும் சூப்பர் குளிர் பானங்கள் இளநீர் வாங்க போகும் முன் இதையெல்லாம் பாருங்க! தேவையற்ற கொழுப்பை குறைப்பதற்கு பூண்டை இப்படி சாப்பிடுங்க! குளிர்ந்த பால் குடிப்பதால் இத்தனை நன்மைகள் உண்டா? முருங்கை காய் ஒரு வாரம் ஆனாலும் ஃப்ரெஷ்ஷாக இருக்க டிப்ஸ்! வெள்ளை நிற உணவுகள் வேண்டாம்..அதற்கு பதிலாக இதை எடுத்துக்கோங்க! குதிகால் மென்மையாக இருக்க இதையெல்லாம் செய்யுங்க பருப்பில் வண்டு வராமல் இருக்க.. இதை try பண்ணுங்க! சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி ப்ரியா பற்றி உங்களுக்கு தெரியுமா? புதிய தொடரில் கமிட்டாகியுள்ள சைத்ரா ரெட்டி? ஒரு கைப்பிடி அளவு தர்ப்பூசணி விதைகள் தினமும் சாப்பிட்டால் உண்டாகும் நன்மைகள் இனிப்பு உணவுகள் சாப்பிடும் ஆசையை குறைக்கும் அருமையான ஜூஸ்கள் கொரியர்களை போல கண்ணாடி சருமம் பெற டிப்ஸ்! சிறகடிக்க ஆசை சீரியல் எடுத்த புதிய பரிமாணம்.. இந்திய அளவில் ட்ரெண்ட் ! வீட்டில் பணத்தை தங்கவைக்கும் 5 பொருட்கள் மஞ்சள் பாலின் ஆரோக்கிய நற்குணங்கள்! வணிகத்தில் வெற்றி பெற்று முன்னேறி வரும் டாப் 10 இந்திய பெண்மணிகள்..!!