Welcome to V Tamil Tv ..... VTamilTv.com என்பது பொதுமக்களுக்கு பயன் உள்ள தகவல் மற்றும் பொழுதுபோக்கு, லைப்ஸ்டைல், அழகு குறிப்பு, உடல் நலம் ஆரோக்கியம் குறித்த தகவல்கள் வழங்கும் இணையதளம் ஆகும்.

பீகாரில் அதிசயம் நிகழ்த்தும் விவசாயி! ஒரே மரத்தில் பூக்கள், காய்கள் மற்றும் கனிகள்..!

Published :
-விளம்பரம்-

முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்திற்கு மட்டும் என்றுமே மவுசு குறையாது. பொதுவாக மாம்பழங்கள் பலராலும் விரும்பப்படும் பழங்களில் ஒன்று. இதனால் நம்மில் பெரும்பாலானோர் வருஷம் முழுவதும் இந்த பழங்களை சாப்பிட வேண்டும் என்று நினைக்கலாம். ஆனால்இந்த மாம்பழம் ஒரு பருவ கால பழமாகும். அதாவது ஒரு குறிப்பிட்ட கால நேரத்தில் மட்டுமே மா மரங்கள் விளைச்சலைத் கொடுக்கும். கோடை மாதங்களையே மாம்பழ சீசன் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் பீகாரை சேர்ந்த ஒரு விவசாயி வருஷம் முழுவதும் மாம்பழங்களை சாகுபடி செய்து சாதித்து காட்டியுள்ளார். அதன் விவரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.

Miracle farmer in Bihar!

பீகாரில் இருக்கும் தர்பங்கா நகரத்தைச் சேர்ந்த விவசாயியான அகிலேஷ் சவுத்ரி, தனது பழத் தோட்டத்தில் பல வகையான மாமரங்களை வைத்துள்ளார். அவை வருடம் முழுவதும் காய்த்து கொண்டிருக்குமாம். இதில் மிகவும் சுவாரசியம் நிறைந்த விஷயம் என்னவென்றால், இந்த மரங்களில் ஒரே சமயத்தில் பூக்கள் ஒரு பகுதியிலும், மாங்காய்கள் ஒருபகுதியிலும், பழுத்த மாம்பழங்கள் ஒரு பகுதியிலும் இருக்குமாம். இதுபோன்ற டஜன் கணக்கில் மரங்கள் அவருடைய தோட்டத்தில் இருக்கின்றன. ஆண்டு முழுவதும் அவை மகசூலை தருகின்றன.

இதையும் படிங்க கொண்டைக்கடலை பிரியாணி எப்படி செய்வது தெரியுமா?

இது போன்ற மாமரங்களை நாம் கண்டிருக்க வாய்ப்பே இல்லை. பொதுவாக நாம் பார்க்கும் மரங்கள் வருடத்துக்கு ஒருமுறை, அதாவது கோடை காலங்களில் மட்டுமே பழங்களை கொடுக்கும். ஆனால் இந்த தோட்டத்தில் விளையும் மாம்பழங்கள் எல்லா பருவ காலங்களிலும் கிடைக்கிறது. மேலும் அகிலேஷ் சவுத்ரி தனது தோட்டத்தில் வருடம் முழுவதும் பழங்களை கொடுக்கும் மரங்களை வளர்த்து வருகிறார். இதற்காக அவர் கடினமாக உழைத்து கொண்டிருக்கிறார். இதனால் அப்பகுதியில் சில மாதங்களை தவிர்த்து வருடத்தின் ஒவ்வொரு சீசனிலும் மாம்பழங்கள் கிடைக்கிறது. அந்த மாதங்களில் மாம்பழங்கள் பழுத்ததும் மரங்கள் உடனடியாக பூ பூக்க ஆரம்பித்து விடுகிறது.

Miracle farmer in Bihar!1
Miracle farmer in Bihar! | Miracle farmer in Bihar!

அகிலேஷ் தோட்டத்தில் கிடைக்கும் மாங்காய் மற்றும் மாம்பழ வகைகள் மக்களை வியப்பில் ஆழ்த்துகிறது. இந்த வகை மாம்பழங்கள் மிகவும் சுவை உள்ளதாக இருப்பதால், அவற்றை மக்கள் அதிகம் விரும்புகின்றனர். இந்த மரங்களில் ஒரே நேரத்தில் பூக்கள், மாங்காய்கள் மற்றும் மாம்பழங்களை நம்மால் பார்க்க முடியும். இந்த மரங்கள் முஜாஹ்பூர் மாவட்டத்திலிருந்து எடுத்து வரப்பட்டது என்றும், ஒவ்வொரு மாங்காயின் எடை 500 கிராம் முதல் இருக்கும் என அகிலேஷ் தெரிவித்துள்ளார்.

நம் நாட்டில் இருக்கும் விவசாயிகள் இங்கு விளையவே விளையாது என்று சொல்லப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகளையும் தொடர்ந்து விளைவித்து வருவது சந்தோஷம் கொடுப்பதாகவே இருக்கிறது. அண்மையில் கூட ஒரு விவசாயி ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மியாசாகி மாம்பழங்களை உடுப்பியில் சாகுபடி செய்து சாதித்துக் காட்டினார். இதிலிருந்து நாம் ஒன்றை மட்டுமே புறிந்து கொள்ள வேண்டும். முடியாது என்று ஒன்றும் கிடையாது. சற்று முயற்சி செய்தால் எதுவும் சாத்தியமே என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு!

இதையும் படிங்க : Iniya Name Meaning in Tamil | இனியா பெயருக்கான விளக்கம்

Miracle farmer in Bihar!
WhatsApp Channel Join Now
Youtube Channel Subscribe Now
Facebook Page Follow Now
Instagram Channel Join Now
-விளம்பரம்-
RELATED ARTICLES
-விளம்பரம்-

சமீபத்திய செய்திகள்

உடலில் இது போன்ற அறிகுறிகள் தெரியுதா? – இதுதான் காரணம்! டீ, காஃபியை எப்போது எப்படி குடிக்கலாம்? வைகாசி மாதத்தில் பிறந்தவர்களுடைய வாழ்க்கை ரகசியம் சுட்டெரிக்கும் வெயிலை தணிக்கும் சூப்பர் குளிர் பானங்கள் இளநீர் வாங்க போகும் முன் இதையெல்லாம் பாருங்க! தேவையற்ற கொழுப்பை குறைப்பதற்கு பூண்டை இப்படி சாப்பிடுங்க! குளிர்ந்த பால் குடிப்பதால் இத்தனை நன்மைகள் உண்டா? முருங்கை காய் ஒரு வாரம் ஆனாலும் ஃப்ரெஷ்ஷாக இருக்க டிப்ஸ்! வெள்ளை நிற உணவுகள் வேண்டாம்..அதற்கு பதிலாக இதை எடுத்துக்கோங்க! குதிகால் மென்மையாக இருக்க இதையெல்லாம் செய்யுங்க பருப்பில் வண்டு வராமல் இருக்க.. இதை try பண்ணுங்க! சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி ப்ரியா பற்றி உங்களுக்கு தெரியுமா? புதிய தொடரில் கமிட்டாகியுள்ள சைத்ரா ரெட்டி? ஒரு கைப்பிடி அளவு தர்ப்பூசணி விதைகள் தினமும் சாப்பிட்டால் உண்டாகும் நன்மைகள் இனிப்பு உணவுகள் சாப்பிடும் ஆசையை குறைக்கும் அருமையான ஜூஸ்கள் கொரியர்களை போல கண்ணாடி சருமம் பெற டிப்ஸ்! சிறகடிக்க ஆசை சீரியல் எடுத்த புதிய பரிமாணம்.. இந்திய அளவில் ட்ரெண்ட் ! வீட்டில் பணத்தை தங்கவைக்கும் 5 பொருட்கள் மஞ்சள் பாலின் ஆரோக்கிய நற்குணங்கள்! வணிகத்தில் வெற்றி பெற்று முன்னேறி வரும் டாப் 10 இந்திய பெண்மணிகள்..!!