mla opened 2 classrooms : மயிலாடுதுறை தி.மு.க.மாவட்ட செயலாளரும்,பூம்புகார் எம் எல் ஏ நிவேதாமுருகன், 2 அரசு பள்ளிகளில்,தலா -ரூ 27. லட்சங்களில், 2 வகுப்பறைகளை திறந்து வைத்தார்
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில், காலமநல்லூர் மற்றும் கிடங்கல் பகுதிகளில்,அரசு பள்ளிகளில் மாணவர்கள் இடபற்றாக்குறை காரணமாக பல ஆண்டுகளாக அவதியுற்று வந்துள்ளனர். இதனை அறிந்த,பூம்புகார் எம் எல் ஏ 2 பள்ளிகளுக்கும், தலா 2 வகுப்பறைகள் கட்ட ஒரு பள்ளிக்கு,ரூ 27.லட்சம் என 2 பள்ளிகளுக்கும்,நிதி பெற்று தந்து வகுப்பறைகளை கட்டி தந்தார்..அந்த வகுப்பறைகளின், திறப்பு விழா7/02/2024 ல் செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில்,மயிலாடுதுறை தி.மு.க.மாவட்ட செயலாளரும் பூம்புகார் எம் எல் ஏ நிவேதா முருகன் மாணவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இதையும் படிங்க : நாகையில் விஜய் ரசிகர்கள் தாரை தப்பட்டை முழங்க, தப்ஸு அடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்
விழாவில்,கூட்டுறவு சங்க தலைவர் ஞானவேலன்,தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொருப்பாளர் ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர்கள் விஜயகுமார் ,மாலிக் மற்றும் பள்ளி ஆசிரியர்களும், மானவ-மாணவிகளும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க : Dreamcatcher வாங்குவதற்கு முன் இதை படிங்க!