Morning Wakeup : ஒவ்வொரு நாள் காலையிலும் சூரியனின் பிரகாசமான ஒளி கதிர்கள் நமக்கு ஒரு நம்பிகையை ஏற்படுத்துகின்றன. நாம் அனைவரும் இரவில் தூங்கி காலையில் எழுந்தவுடன் ஒரு துடிப்பும், புதியநம்பிக்கையும் நம் அனைவருடைய மனதிலும் நிரம்பி வழிகின்றன. நம்பிக்கையின்படி, நாம் தூங்கி காலையில் எழுந்தவுடன் இன்றைய நாள் முழுதும் நன்றாக இருந்தால், இன்றைய நாள் சுமூகமாக நடக்கும், மேலும் மகிழ்ச்சிகரமான செய்திகளை கேட்போம்.
காலையில் எழுந்தவுடன் சில காட்சிகளை பார்த்து அதில் சில அறிகுறிகளை நமக்கு சுபமாக நினைக்கிறோம். குறிப்பாக அதிகாலையில் எழுந்தவுடன் இதனை பார்த்தால் இன்றைய நாள் நன்றாக இருக்கும். அந்த விஷயங்கள் என்ன என்பதை பற்றி கீழே விளக்கப்பட்டுள்ளது.
சிலந்தி ஏறுவதை பார்த்தால் மங்களகரமானது
நீங்கள் காலையில் எழுந்தவுடன் வீட்டிற்குள்ளேயோ அல்லது வெளியிலோ சிலந்தி ஏறுவதை பார்த்தால், அது உங்கள் முன்னேற்றத்திற்கு அடையாளம். இது போன்று சிலந்தி ஏறுவதை காலையில் கண்டால் சுபமாக எண்ணப்படுகிறது.
நம் வாசலுக்கு மாடு வந்தால் | Morning Wakeup
உங்கள் வீட்டு வாசலுக்கு வாரத்தில் ஒரு நாள் காலையில் பசு வந்தால், லட்சுமி தேவியே உங்கள் வீட்டு வாசலுக்கு வந்திருப்பதாக கருதி கொள்ளுங்கள். பசுவிற்கு உணவு ,கீரைகள் பச்சை இலைகள் கொடுங்கள். பசுவினுடைய பாதங்களை நெற்றிக்கண்ணால் கும்பிடுங்கள்.
காலையில் தூங்கி எழுந்தவுடன் கோவிலில் அடிக்கும் மணி ஒலி ஓசையை கேட்பது மிகவும் மங்களகரமாக கருதப்படுகிறது. அது நீங்கள் கடவுளின் ஆசீர்வாதம் பெற போகிறீர்கள் என்பதற்குண்டான அறிகுறியாகும். நீங்கள் நிறுத்தி வைத்த பணியானது மீண்டும் தொடரும். வீட்டிலிருந்து வேலை சம்பந்தமாக வெளியே செல்லும் போது, ஆரத்தி,பிறர் வீட்டிலிருந்து மணி ஓசை கேட்டால் மிகவும் நல்லது.
பறவைகளின் குரல் | Morning Wakeup
காலையில் எழுந்தவுடன் கிளி, புறா, அல்லது வேறு பறவைகள் குரல்கள், அதனை நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது.உங்களுக்கு நல்ல நாட்கள் ஆரம்பிக்கப்போகிறது என்று அர்த்தம். உங்கள் குலதெய்வம் மகிச்சியடைந்து பறவைகள் போல் தனது தூதர்களை அனுப்புகிறார் என்று அர்த்தம். பறவைகளுக்கான உணவு பொருட்கள் மற்றும் தண்ணீர் வீட்டில் வைக்க மறக்காதீர்கள்.
சிவப்பு வண்ணம் ஆடை அணிந்த ஒரு பெண்
நீங்கள் காலையில் வேலைக்கு செல்லும் போது சிவப்பு கலர் ஆடை அணிந்த ஒரு பெண்ணை பார்ப்பது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரப்போவதாக கருதப்படுகிறது. குறிப்பாக மணமான பெண்ணை பார்த்தால் அது மிகவும் சுபம்.
இதை எல்லாம் பார்ப்பது நல்லது
தங்கம்,சாணம் பச்சைப்புல், தாமிரம் ஆகியவற்றை காலையில் பார்ப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது இவைகள் அனைத்தும் இயற்கையுடன் உங்களை நெருக்கமாக வைத்து மங்களகரமாக ஆக்குகிறது. மேலும் தாமிரம், தங்கம், பச்சை புல், மற்றும் சாணம் ஆகியவை சுப அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது. அவைகளை நாம் காலையில் பார்ப்பது மிகவும் புனிதமானது.
SUBSCRIBE V TAMIL LIFESTYLE OFFICIAL CHANNEL | CLICK HERE |
---|---|
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | வி தமிழ் செய்தி |
சமையல் குறிப்பு சம்மந்தமான அனைத்து பதிவுகளையும் இங்கு காணலாம் –> | ஆனந்தி சமையல் |