தற்போது சமூக வலைதளத்தில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் பற்றிய பேச்சாகதான் இருக்கிறது. முகேஷ் அம்பானி வீட்டில் விசேஷம் நடந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனம் அனைத்தும் நயன்தாரா மீது தான் உள்ளது.
Nayanthara Vignesh Divorce?
நயன்தாரா இன்ஸ்டாகிராமில் கணவர் விக்னேஷ் சிவனை unfollow செய்தார் என செய்திகள் வெளியானது. மேலும் அந்த நேரம் பார்த்து நயன்தாரா போட்ட இன்ஸ்டா ஸ்டோரியை பார்த்தவர்கள் அனைவரும், கண்டிப்பாக இவர்கள் பிரச்சனை பெரிதாகிவிட்டது என்று பேசினார்கள். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் விக்னேஷ் சிவனை மீண்டும் பின் தொடர்கிறார் நயன்தாரா.
இவை அனைத்தையும் பார்த்த சினிமா ரசிகர்கள், ஜோதிடர் வேணுசாமி சொன்னவாறு நடந்திடுமோ என்கிறார்கள். நயன்தாராவுக்கு கல்யாணம் நடந்த பிறகு தொடர்ந்து பிரச்சனை வரும் எனவும், அவர் அவ்வப்போது சர்ச்சையில் மாட்டிக்கொள்வர் என கூறியிருந்தார் ஜோதிடர் வேணுசாமி.
இதையடுத்து நயன்தாராவும், விக்னேஷ் சிவன் ஜோடியும் விரைவில் பிரிந்துவிடுவார்கள் என வேணுசாமி கணித்துள்ளார். அதை பார்த்த நயன்தாரா ரசிகர்கள் எல்லாம் அதற்கு வாய்ப்பே இல்லை என்றார்கள். இதற்கு முன்பு சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து செய்துகொள்வார்கள் என கணித்தவர் வேணுசாமி.
சமந்தா விஷயத்தில் வேணுசாமியின் ஜோதிடதின்படி நடந்திருக்கலாம். எங்க நயன்தாராவும்எங்க நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் பிரிவதற்கு வாய்ப்பே இல்லை என்றார்கள் ரசிகர்கள். இந்நிலையில் தற்போது சமூகவலைத்தளங்களில் நடந்ததை பார்த்த சினிமா ரசிகர்களோ, ஒரு வேளை வேணுசாமி சொன்னது போல நடக்க ஆரம்பித்து விட்டதோ என்கிறார்கள்.
இன்ஸ்டாகிராமில் விக்னேஷ் சிவனை நயன்தாரா பின் தொடராமல் போனது இருந்திருக்கலாம். அதனால் விவகாரத்து செய்து விடுவார்கள் என பேசுவது மிகவும் தவறு என்கிறார்கள் ரசிகர்கள். அந்த இன்ஸ்டாகிராம் குழப்பம் உண்டான பிறகு நயன்தாராவை பற்றி இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போட்டார் விக்னேஷ் சிவன். எனக்கும், நயன்தாராவுக்கும் இடையே எந்த பிரச்சனையும் கிடையாது. நாங்கள் எப்பொழுதும் போலவே ஒற்றுமையாக இருக்கிறோம் என்று அந்த ஸ்டோரி மூலம் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் விக்னேஷ் சிவன்.
நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் இந்த விவாகரத்து தகவலை எல்லாம் பார்த்து நிச்சயம் சிரிப்பார்கள். முதலில் காதல் குறித்து வதந்தி, அதன் பின் திருமணம், தற்போது விவாகரத்து, அதற்கடுத்து என அவர்கள் இருவரும் சிரித்தாலும் சிரித்திருப்பார்கள்.
இதற்கிடையே குஜராத்தில் நடந்து வரும் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்சென்ட் திருமணவிழாவின் முந்தைய கொண்டாட்டத்திற்கு நயன்தாராவை அழைக்கவில்லையா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். முன்னதாக முகேஷ் அம்பானி வீட்டு விநாயகர் சதுர்த்தி விழாவில் கணவருடன் பங்கேற்றார் நயன்தாரா. அதனால் இந்த நிகழ்ச்சிக்கு இவர்களை அழைக்கவில்லையா என்று கேட்கிறார்கள்.
இதையும் படிங்க : கார்ன் ஃப்ரை செய்வது எப்படி..?
For more live updates visit : Anandhi Talks