வி தமிழ் டிவி வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய பதிவின் மூலமாக வீட்டினுள் வைக்க வேண்டிய அழகிய தாவரங்கள் எது என்பதை பற்றி தான் சொல்லப்போகின்றோம். பொதுவாக நம் வீட்டை அழகாக வைத்து கொள்ள வேண்டும் என்று எல்லோருக்கும் ஆசை இருக்கும்.
அதிலும் ஒரு சிலருக்கு வீட்டை சுற்றியும் வீட்டினுள்ளும் அழகிய மற்றும் வண்ண வண்ண பூச்செடிகளை வைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் என்ன செடிகளை வைத்தால் அழகாக இருக்கும் என்ற யோசனை அனைவருக்கும் வரும். ஆகையால், இந்த பதிவின் மூலமாக வீட்டினுள் வைக்க வேண்டிய வகையான அழகிய தாவரங்கள் பற்றி காணலாம் வாங்க..!
வீட்டினுள் வைக்க வேண்டிய அழகான தாவரங்கள்: Plants that beautify the home
Coleus – கோலியஸ்:
கோலியஸ் என்பது வீட்டிற்குள் வளர்க்க வேண்டிய அழகிய செடி ஆகும். இந்த கோலியஸ் செடியானது பச்சை கலரில் இருந்து சிவப்பு, ரோஸ் கலர், இளஞ்சிவப்பு மற்றும் ஊதா கலர் வரை பல வண்ணங்களில் காணப்படுகிறது. இதை நாம் வீட்டின் உள்ளே வளர்க்கும் போது இந்த கோலியஸ் செடியானது வீட்டிற்கு தனி அழகை உண்டாக்குகிறது.
கோலியஸ் செடிகளை வீட்டினுள் வளர்ப்பது கடினமல்ல ஆனால் வெளிச்சம் மற்றும் வெப்பநிலையில் அதை வைப்பது அவசியம். மண்ணை சற்று ஈரமாக வைத்திருக்க தவறாமல் தண்ணீர் ஊற்றவும் வறண்டு விடாமல் பார்த்து கொள்ள வேண்டும். செடியின் நுனிகளை அடிக்கடி வெட்டி விடவேண்டும்.
பூக்கள் பூத்தால் அவற்றை நீக்கிவிடவும் ஏனெனில் அவை வண்ணமயமான இலைகளிலிருந்து சக்தியை பெறுகின்றன. வசந்த காலத்திலும் கோடைகாலத்திலும் ஒரு வாரத்திற்கு அல்லது 2 வாரங்களுக்கு ஒரு முறை உரம் இடவும்.
Caladium – காலடியம்:
இந்த Caladium காலடியம் செடியானது பொதுவாக இதய அமைப்பிலான பெரிய இலைகளைக் கொண்டிருக்கும். இந்த காலடியம் செடியானது சிவப்பு, இளஞ்சிவப்பு, வெள்ளை மற்றும் பச்சை போன்ற பல வண்ணங்களில் இருக்கிறது. இந்த செடியை நாம் வீட்டில் வளர்க்கும் போது வீட்டிற்கு பிரகாசத்தை உண்டாக்கும்.
இந்த செடி எப்பொழுதும் ஈரப்பதத்தில் வைத்து இருக்க வேண்டும். கலாடியங்களுக்கு அதிக உரம் தேவைப்படாது, ஏனென்றால் உரத்தை அதிகமாகப் உபயோகப்படுத்தினால் இலைகள் பொசுங்கி விடும். இந்த காலடியம் செடியை செல்லப்பிராணிகள் மற்றும் குழந்தைகளுக்கு எட்டாதஇடத்தில் வைக்கவும். இலைகள் அல்லது தண்டுகளில் இருந்து வரும் சாறுகளால் சிறிய தோல் எரிச்சலை உண்டாக்கும்.
இதையும் படிங்க : தேங்காய், தக்காளி சேர்க்காமல் மதுரை நீர் சட்னி செய்வது எப்படி? 2 இட்லி கூடுதலாக சாப்பிடுவாங்க..!
Croton – குரோட்டன்:
குரோட்டன் (Croton) செடியானது பச்சை, கருஞ்சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் ஆகிய பல நிறங்களில் இலைகளை கொண்ட செடியாகும். நாம் இந்த குரோட்டன் செடிகளை வீடு அல்லது தோட்டத்தில் வளர்க்கும் போது அது வீட்டிற்கு அழகினை சேர்க்கிறது. இந்த குரோட்டன் செடிகள் பெரிய புதர்களாக வளரும். பத்து அடி உயரத்தை எட்டும்.
குறிப்பாக இந்த தாவரத்தின் எல்லா பகுதிகளும் விஷத்தன்மை உடையவை ஆகவே செல்லப்பிராணிகள் அல்லது குழந்தைகள் இருக்கும் வீடுகளில் இதைப் உபயோகப்படுத்த பரிந்துரைக்கப்படவில்லை. இந்த செடியில் இருந்து வரும் பால் ஆனது தோலில் எரிச்சலை உண்டாக்குகிறது.
Polka Dot Plant – போல்கா டாட்:
இந்த போல்கா டாட் செடியானது இது பிரகாசமான அழகு மயமான இலைகளைக் கொண்ட ஒரு மூலிகை செடி என்று கூறப்படுகிறது. போல்கா டாட் தாவரங்கள் இளஞ்சிவப்பு வண்ணத்துடன் கூடிய பச்சை நிற இலைகளை பெற்றுள்ளன. அதுமட்டுமில்லாமல் ஊதா, வெள்ளை அல்லது சிவப்பு வண்ணங்களுடன் கூடிய வகைகளும் இருக்கின்றன. இந்த செடியானது வீட்டிற்கு அழகு சேர்க்கிறது.
பிரகாசமான, மறைமுக ஒளி அல்லது பகுதி நிழலுடன் சூடான, ஈரப்பதம் கொண்ட நிலையில் போல்கா டாட் செடி நன்றாக வளரும். போல்கா டாட் செடியை வளமான, நன்கு வடிகட்டிய பாட்டிங் கலவையில் நட வேண்டும்.
போல்கா டாட் செடிகளை பிரகாசமான, மறைமுக ஒளி உட்புறம் அல்லது பகுதி சூரியன் வெளியில் ஒரு சூடான பகுதியில் வைக்கவும். மேல் அரை அங்குல மண் காய்ந்த பின்னர் உங்கள் போல்கா டாட் செடிக்கு தண்ணீர் பாய்ச்சவும். வசந்த காலத்திலும் கோடைகாலத்திலும் மாதத்திற்கு ஒரு தடவை தாவரங்களில் உரம் இடவும்.
இதையும் படிங்க : முருங்கைக்காய் சாப்பிடுவதிலும் இவ்வளவு தீமைகள் இருக்கிறதா ..!
Nerve Plant – நரம்பு தாவரம்:
இசாதாரணமாக ஒரு தொட்டியில் இந்த நரம்பு செடியை வீட்டு தாவரமாக வளர்க்கப்படுகிறது. இந்த செடியானது வெள்ளை, இளஞ்சிவப்பு, சிவப்பு மற்றும் பச்சை கலர்களில் நரம்பு போன்ற வடிவங்களில் இருக்கிறது.
இந்த செடியை நாம் வீட்டில் வளர்க்கும் போது அது மிக அழகாக தோன்றுகிறது. இந்த செடியை எப்பொழுதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்க வேண்டும்.