Pongal at AVC Educational College : மயிலாடுதுறை அருகே மன்னன்பந்தல் ஏவிசி கல்வி நிறுவனங்கள் மூலம் சமத்துவ பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கல்லூரியின் வளாகத்தில் தமிழர் பாரம்பரிய முறைப்படி நடந்தது.இதில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரியுமான கே.வெங்கட்ராமன் தலைமைவகித்தார்.
பொறியியல் கல்லூரியின் இயக்குனர் எம். செந்தில் முருகன், ஏவிசி கல்லூரி முதல்வர் ஆர். நாகராஜன், தேர்வு நெறியாளர் மேஜர்.ஜி. ரவிசெல்வம், பொறியியல் கல்லூரி முதல்வர் சி.சுந்தர்ராஜ், பாலிடெக்னிக் கல்லூரி இயக்குனர் ஏ. வளவன், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் எஸ். கண்ணன், உள்ளிட்டோர்கள் முன்னிலை வகித்தனர். கல்லூரி மாணவ-மாணவிகளும் பேராசிரியர்களும் கரும்பு, பச்சரிசி, மஞ்சள், இஞ்சி போன்ற கொத்துகள் கட்டப்ட்ட மண் பானையில் சமத்துவப்பொங்கலிட்டு தமிழர் கலாச்சார மரபுபடி சூரியன் மற்றும் பசுக்களுக்கு படைத்து கொண்டாடினர்.
Read Also : ரூ. 2 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை திறந்த தமிழக முதல்வர்
இதில் கல்லூரி நுண் கலை மன்ற மாணவ மாணவிகளின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான சிலம்பம், சுருள், தீப்பந்தம் போன்ற வீர விளையாட்டுக்கள், பரதநாட்டியம், கும்மி,ஒயில் ஆட்டம், நாடகம்,நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் டீன் எஸ். மயில்வாகணன் மற்றும் ஏவிசி கல்வி நிறுவனங்களை சேர்ந்த பேராசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை தமிழாய்வுத்துறை பேராசிரியர்கள் செய்திருந்தார்கள்