Cat superstition | மூடநம்பிக்கைகளில் நம்பிக்கை வைத்து உள்ள மக்கள் பூனைகளை கெட்டவைகளாக கருதுகின்றனர்.
நாம் வெளியே போகும் போது பூனையை கண்டால், அது கெட்ட சகுணமாக நினைக்கிறோம். பின்னர் உடனடியாக நின்றுவிட்டு கொஞ்சம் நேரம் கழித்து மீண்டும் செல்லுவோம். ஏனென்றால் பூனைகள் சில சமயங்களில் அசுபமாக எண்ணப்படுகின்றன.
பழைய நம்பிக்கைகளின்படி, பூனைகள் வீட்டிற்கு எதிர்மறை சக்திகளை கொண்டு வருகின்றன. எனவே வீட்டில் பூனை நல்லதல்ல என்று சொல்லப்படுகிறது. பூனை இடமிருந்து வலமாக நகர்ந்தால், அது மோசமான அறிகுறி என்று பலர் கருதுகிறார்கள். அது வலமிருந்து இடமாகசென்றால், அது மங்களகரமானதாகக் நினைக்கப்படுகிறது
ஒரு பூனையின் அழுகை கூட நல்லதல்ல என கருதப்படுகிறது. இந்தியாவை சேர்த்து பல நாடுகள் பூனைகளை அசுபமாக கருதுகின்றன.
அதிலும் குறிப்பாக கருப்பு பூனை குறுக்கே வந்து என்றால் உடனே வாகனத்தை நிறுத்தி விடும் பழக்கம் நம்மவர்களிடையே அதிகம் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கருப்பு நிறம் சனி பகவானுக்கு உகந்தது என்பதால் தீமை உண்டாகக்கூடும் என பலரும் நம்புகின்றனர்.
வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் வரக்கூடிய அதிர்ஷ்டங்கள்
ஆனால் பூனையை காண்பது துரதிர்ஷ்டமா, அறிவியல் சொல்லும் உண்மை என்ன என்பதை பார்க்கலாம்.
reason behind cat cross on way
முன்னொரு காலத்தில் மக்கள் மாடு வண்டிகளில் பயணம் சென்றார்கள்,அப்படி பயணம் செய்யும் பொது பூனை குறுக்கே வரும் அந்த நேரத்தில் மாடு மிரண்டுவிடும் ஆகையால் மக்கள் மாடு வண்டியை நிறுத்திவிட்டு சற்று நேரம் கழித்து செல்வார்கள். இது காலப்போக்கில் மூடநம்பிக்கையாக மாறி தற்போது கெட்ட சகுணமாக கருதப்படுகிறது.
ஒரு மாதம் இயக்குனரிடம் பேசாமல் இருந்த விஜய்!.. கில்லி படப்பிடிப்பில் நடந்த அந்த சம்பவம்!.