Rekha Nair: பதினேழு வயதில் திருமணம், அதைத் தொடர்ந்து விவாகரத்து; அடுத்து என்ன நடந்தது என்பதை ரேகா நாயர் கூறியுள்ளார்!!
தற்போது ரேகா நாயர் ( Rekha Nair )
ரேகா தனது மகளுடன் வசித்து வருகிறார். தற்போது அவர் தனது திருமண வாழ்க்கையில் விவகாரத்துக்கான விஷயங்களை பற்றி பேசியுள்ளார். ரேகா நாயர் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகை அவர். மேலும், மோட்டிவேஷனல் பேச்சாளர் மற்றும் தொகுப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் ஆவார்.
வம்சம் , பகல் நிலவு, ஆண்டாள் அழகர், நாம் இருவர் நமக்கு இருவர், பால கணபதி போன்ற தொடர்கள் மூலம் தமிழ் குடும்பங்களுக்கு நன்கு அறிமுகமானவர் ரேகா. சன் டிவியில் செய்தி தொகுப்பாளராகவும் பணியாற்றியவர் ரேகா.
ரேகா தனது மகளுடன் வசித்து வருகிறார். தற்போது அவர் தனது திருமண வாழ்க்கை விவாகரத்துக்கு வழிவகுத்த விஷயங்களை பற்றி விளக்கி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். பதினேழு வயதில் தனக்கு திருமணம் நடைபெற்றது என்றும் கூறியுள்ளார்.
கல்லூரியில் நுழைந்த உடனேயே திருமணம் ஆயிடுச்சு. அப்போது எனக்கு பதினேழு வயதுதான். ஆனால் அந்த திருமணம் உறவு நீண்ட காலம் நீடிக்கவில்லை. ஏக்கர் கணக்கில் நிலம் இருந்தும், குடும்பம் நடத்த முடியாமல் திணறினர். நாங்கள் இருவரும் விவாகரத்து பெற்று விட்டோம். நான் வளர நிறைய கஷ்டப்பட்டேன் – என்கிறார் ரேகா.
என் மகள் பிறந்தபோது எனக்கு கணவர் இல்லை. இதை நான் கேரளாவில் உள்ள பெற்றோருக்கு கடிதம் மூலம் தெரிவித்தேன். அப்போது தொலைபேசி வசதி இல்லை. அதன் பிறகு வந்து குழந்தையை அழைத்துச் சென்றனர். குழந்தை திருமணத்தை தடுக்கும் அறிவு கூட எனக்கு அப்போது இல்லை.
இப்போது 37 வயது. பின்னர், சுயமுயற்சியால் முன் வந்தேன். இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. வீடு வாங்கினேன். என்னிடம் இரண்டு கார்கள் உள்ளன. ஒரு பெண்ணால் செய்ய முடியாதது என்பது உலகில் இல்லை. எல்லாம் சாத்தியம் என்று கூறும் படி செய்து அவரது வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
மேலும் ரேகா நாயர் இரவின் நிழல் படத்தில் நடித்ததால் சர்ச்சையில் சிக்கினார். இரவின் நிழல் படத்தில் நடித்ததை யூடியூப் சேனலில் பயில்வான் ரங்கநாதன் படுமோசமாக பேசி இருந்தார். இதன் காரணமாக நடிகரும் திரைப்பட விமர்சகருமான பைல்வான் ரங்கநாதனை திருவான்மியூர் கடற்கரையில் வாக்கிங் சென்றவரை மடக்கி நான் என்ன பொண்ணா.. இல்ல உன் பொண்டாட்டியா? நான் எப்படி வேண்டும் என்றாலும் நடிப்பேன். அதைக் கேட்க உனக்கு என்ன தகுதி இருக்கு? என்றும் புடிச்சா பாரு இல்லைனா போ… எனவும் ஏதுவும் தெரியாம இனிமே நீ பேசுனா செருப்பு பிஞ்சிடும் என ரேகா பயில்வானை அடிக்க பாய்ந்தார்.
என்னை பற்றி பேச உரிமை இல்லை… இது வெட்கக்கேடானது : பிக்பாஸ் குறித்து ரச்சிதா அதிரடி
அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பைல்வான் ரங்கநாதனிடம் யாரும் பேச தயங்கும் நிலையில், ரேகா துணிந்து பேசியதை பலரும் பாராட்டினர். நடிகை ரேகா நாயர் சில ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாம் திருமணம் செய்து கொண்டேன் என்று பேட்டியில் கூறியுள்ளர்.
இதையும் படியுங்கள் : உங்கள் கணவரின் பிறந்தநாளை கொண்டாட Best 8 Surprise டிப்ஸ்!