Welcome to V Tamil Tv ..... VTamilTv.com என்பது பொதுமக்களுக்கு பயன் உள்ள தகவல் மற்றும் பொழுதுபோக்கு, லைப்ஸ்டைல், அழகு குறிப்பு, உடல் நலம் ஆரோக்கியம் குறித்த தகவல்கள் வழங்கும் இணையதளம் ஆகும்.

Remedy for own business | சொந்த தொழிலில் முன்னேற்றம் அடைய பரிகாரம்

Published :
-விளம்பரம்-

Remedy for own business : இக்காலத்தில் சுயதொழில் செய்து லாபம் அடைவது மிகவும் கடினமானது.ஒரு சிலரின் கைராசியால் அவர்கள் செய்யும் தொழிலில் ஆதாயத்தை கொடுக்கும். ஆனால் ஒரு சிலரின் கைராசி தொழிலில் முதலீடு செய்த தொகையைக்கூட அடைய முடியாமல் மிகவும் கஷ்டப்படுவார்கள். அப்படி லாபம் அடையாமல் இருக்கும் வியாபாரிகளுக்கு இந்த பதிவு பயன் நிறைந்ததாக இருக்கும்.

சுயதொழில் என்பது அவர்களின் கைராசியை பொறுத்து அமைகிறது. நாம் சிறிய கடையினை வைத்தால் கூட எல்லா வாடிக்கையாளர்கள் அனைவரையும் வசப்படுத்தும் தன்மை நமக்கும் நம் கடைக்கும் இருக்க வேண்டும்.

அதாவது சுயதொழிலில் மயக்கூடிய தன்மை இருக்க வேண்டும். வசியம் என்பது லாபத்தையும், வாடிக்கையாளர்களையும் நம் வசப்படுத்துவது என்பதைத்தான் இந்த பதிவில் காண போகிறோம். அதாவது கீழே கொடுத்துள்ள இந்த 2 பொருட்களை வைத்து எளிய பரிகாரம் செய்வது என்பதை பின் வருமாறு பார்ப்போம் வாருங்கள்.

தொழிலில் லாபம் அடைய : Remedy for own business

Remedy for own business
Remedy for own business

தொழில் செய்யும் இடத்தில பணம் ஈர்க்கும் பொருளை வைத்தாலே போதும், பல மடங்கு லாபம் அதிகரிக்கும்.அது என்னப்பொருள் அதாவது ஒன்று கசகசா மற்றொன்று கஸ்தூரி மஞ்சள் ஆகும். இந்த இரண்டு பொருளிற்கும் பணத்தை ஈர்க்கும் தன்மை உள்ளது.

பொதுவாக இயற்கையாகவே மஞ்சளுக்கு வசீகரிக்ககூடிய தன்மை கொண்டது, வாசனை நிறைந்த கஸ்தூரி மஞ்சளுக்கு வசீகரிக்கும் தன்மை அதிகமாகவே இருக்கிறது. அடுத்தபடியாக சமையலுக்கு பயன்படுத்தும் கசகசாவிற்கு பணத்தை ஈர்க்கக்கூடிய தன்மை கொண்டது. இவ்வாறு ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.
எனவே பூஜை செய்யும் அறையில் அல்லது தொழில் செய்யும் இடத்தில ஒரு கிண்ணத்தில் கசகசாவையும் மற்றொரு கிண்ணத்தில் கஸ்தூரி மஞ்சளையும் வைக்கவேண்டும்.

Read Also : செம்பருத்தி செடியில் இருக்கும் மாவு பூச்சியை முற்றிலும் அழிக்க மைதா மாவு போதும் …!

பிறகு இரவில் தூங்குவதற்கு முன்பாக ஒரு டம்ளரில் நீரை ஊற்றி.அந்த நீரில் கசகசா மற்றும் சிறிதளவு கஸ்தூரி மஞ்சளை சேர்த்து ஊறவைத்து விடுங்கள். மறுநாள் காலையில், பூஜை அறையினை சுத்தம் செய்து,கடவுளுக்கு பூஜை செய்தவுடன், அந்த தண்ணீரினை எடுத்து,உங்கள் கடையின் உட்புறத்திலும், மூலை முடுக்கிலும் தெளிக்கவும், அதே போல் தொழில் செய்யும் இடத்தின் வாசலிலும் தெளிக்கவும்.

நீங்கள் இந்த சிறிய பரிகாரத்தை செய்வதன் மூலம் பலமடங்கு நல்ல பலன்களை அடையலாம்.

Watch Video : நடிகை அமலா அக்கினேனியின் டாப் 10 தமிழ் படங்கள்!

WhatsApp Channel Join Now
Youtube Channel Subscribe Now
Facebook Page Follow Now
Instagram Channel Join Now
-விளம்பரம்-
RELATED ARTICLES
-விளம்பரம்-

சமீபத்திய செய்திகள்

உடலில் இது போன்ற அறிகுறிகள் தெரியுதா? – இதுதான் காரணம்! டீ, காஃபியை எப்போது எப்படி குடிக்கலாம்? வைகாசி மாதத்தில் பிறந்தவர்களுடைய வாழ்க்கை ரகசியம் சுட்டெரிக்கும் வெயிலை தணிக்கும் சூப்பர் குளிர் பானங்கள் இளநீர் வாங்க போகும் முன் இதையெல்லாம் பாருங்க! தேவையற்ற கொழுப்பை குறைப்பதற்கு பூண்டை இப்படி சாப்பிடுங்க! குளிர்ந்த பால் குடிப்பதால் இத்தனை நன்மைகள் உண்டா? முருங்கை காய் ஒரு வாரம் ஆனாலும் ஃப்ரெஷ்ஷாக இருக்க டிப்ஸ்! வெள்ளை நிற உணவுகள் வேண்டாம்..அதற்கு பதிலாக இதை எடுத்துக்கோங்க! குதிகால் மென்மையாக இருக்க இதையெல்லாம் செய்யுங்க பருப்பில் வண்டு வராமல் இருக்க.. இதை try பண்ணுங்க! சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி ப்ரியா பற்றி உங்களுக்கு தெரியுமா? புதிய தொடரில் கமிட்டாகியுள்ள சைத்ரா ரெட்டி? ஒரு கைப்பிடி அளவு தர்ப்பூசணி விதைகள் தினமும் சாப்பிட்டால் உண்டாகும் நன்மைகள் இனிப்பு உணவுகள் சாப்பிடும் ஆசையை குறைக்கும் அருமையான ஜூஸ்கள் கொரியர்களை போல கண்ணாடி சருமம் பெற டிப்ஸ்! சிறகடிக்க ஆசை சீரியல் எடுத்த புதிய பரிமாணம்.. இந்திய அளவில் ட்ரெண்ட் ! வீட்டில் பணத்தை தங்கவைக்கும் 5 பொருட்கள் மஞ்சள் பாலின் ஆரோக்கிய நற்குணங்கள்! வணிகத்தில் வெற்றி பெற்று முன்னேறி வரும் டாப் 10 இந்திய பெண்மணிகள்..!!