Saniyan Meaning in Tamil : அனைவருக்கும் கோபம் வரக்கூடியது பொதுவான ஒன்று. சிலர் காரணத்தோடு சண்டைபோடுவார்கள் சிலர் சின்ன சின்ன செயல்களுக்கும் கோபப்படுவார்கள். அப்படி கோபத்தை வெளிப்படுத்துகிற போது அவர்கள் தன்னயே மறந்து சில வார்த்தைகளை சொல்லி விடுவார்கள். அந்த வார்த்தை அடுத்தவர்களை பாதிக்கும் என்று தெரியாமல் பேசிடுவார்கள். பிறகு நாம் அது மாதிரி பேசினோமா என்று நினைத்துப்பார்ப்பார்கள். அப்படி பேசக்கூடிய வார்த்தைகள் சில நேரத்தில் அவர்களுக்கே பாதிப்பு ஏற்படும் அளவிற்கு வந்து சேரும்.
அப்படிப்பட்ட அனைவருக்கும் எளிதில் வாயில் வரக்கூடிய வார்த்தையான சனியனே என்ற சொல்லிற்கான விளக்கத்தையும் நாம் இன்னொரு வரை திட்டினால் அல்லது இன்னொருவர் நம்மை இந்த வார்த்தை சொல்லி திட்டினால் என்ன விளைவுகள் வரும் என்று இந்த பதிவில் பார்ப்போம்.
சனியனே வார்த்தையின் விளக்கம்
முதலில் நாம் பயன்படுத்தும் அனைத்து சொல்லுக்கும் அர்த்தம் தெரிந்து பேசினால் முடிந்த அளவு நமக்கு எந்த பிரச்சனைகள் ஏற்படாது.
இப்போது அனைவரும் சனியனே என்று திட்டுவது சாதாரணமாகி விட்டது, விளையாட்டாக நண்பர்களுக்குள் இந்த வார்த்தையை அதிகம் பயன்படுத்துவார்கள். இதனுடைய பொருள் அவர்களுக்கு தெரிந்தால் அப்படி சொல்லமாட்டார்கள்.
நாமெல்லாம் கேள்விப்பட்டிருப்போம், சனியனே என்று திட்டினா சனிபகவான் பேரை சொல்லி நம்மள வச்சி கேலி செய்வதாகவும், அவருடைய முழு பார்வையும் அவர்கள் மேலே திருப்பிவிடும் என்றும், சனிபகவானை நேராக பார்த்து கும்பிடமாட்டாங்க, அப்படி வழிபட்டால் அவருடைய முழு பார்வையும் நம்ம மீது பட்டுவிடும் என்று ஒரு பயம் தான்.
Read Also : தனுஷ் அப்படி இருந்தா பிடிக்கும்.. அவர் சீரியசான ஆள் கிடையாது.. நடிகை பிரியங்கா மோகன்
Saniyan Meaning in Tamil
சனிபகவான் என்றாலே அனைவருக்கும் ஒரு பயம் தான், ஏன்னா போற போக்குல ஒரு பிரச்சனையை கொடுத்துட்டு போய்டுவாருனு நம்புறாங்க.
பொதுவாகவே சனி கிரகத்தை மந்தமான கிரகம்னு சொல்லுவாங்க ஏன்னா, மற்ற கிரகத்த பொறுத்த வரையில் இது சூரியனை பொறுமையாக தான் சுற்றி வருமாம் . அப்படி சுற்றி வரும் போது ஒரு மனிதனோட பொதுவான பண்புகளான எண்ணம், சொல் மற்றும் செயல் இவற்றை ஆக்கரமிப்பாராம்.
அப்படி சனிபகவான் யாரை ஆக்கரமித்து கொள்கிறாரோ அவரோட எண்ணம் மற்றும் சொல்லில் சனிபகவானுடைய பிரதிபலிப்பு இருக்குமாம். ஒருவர் பேசும் போது அவருடைய வாயிலிருந்து சனி என்று வந்து விட்டால் அவருடைய வாழ்க்கையில் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு கஷ்டங்கள் வருமாம்.
தவளை தன் வாயால் கெடும் என்று சொல்ற மாதிரி, இப்படி பட்ட சொல்களை சொல்லி விட்டு பிறகு ஏன் அனுபவிக்கனும். அதனால ஒவ்வொரு வார்த்தைளைபேசும் போது கவனம் தேவை