Sarathkumar pays floral tributes to vijyakanth : மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு, சமத்துவ கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார் வந்து மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.
தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் கடந்த 28 ஆம் தேதி மறைந்த போது சரத்குமார் வெளிநாட்டில் இருந்ததால் தனது இரங்கலை வீடியோ வாயிலாக தெரிவித்தார்.
Sarathkumar pays floral tributes to vijyakanth
இந்த நிலையில் சென்னைக்கு வந்த சரத்குமார். கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அங்குள்ள விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று சோகம் நிறைந்த முகத்துடன், கண்ணீரோடு, அந்த இடத்தை பார்த்துகொண்டே நின்றார். பிறகு மாலை அணிவித்து மலர் தூவி தனது மரியாதையை செலுத்தினார்.
Read Also : பொது மக்கள் அடிப்படை வசதிகள் வேண்டி திடீர் சாலை மறியல்
பின்னர், செய்தியாளர்களிடம் சரத்குமார் பேசும்போது, கேப்டன் விஜயகாந்த் மணிமண்டபம் பற்றி பிரேமலதா விஜயகாந்த் அரசுக்கு வேண்டுகோள் கொடுத்த கோரிக்கையை பற்றி அவரது வீட்டிற்கு சென்று அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் ஆலோசனை நடத்த இருப்பதாக கூறினார்.
Read Also : நடிகை அமலா அக்கினேனியின் டாப் 10 தமிழ் படங்கள்!