Bank account | தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அந்த பள்ளியிலேயே வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு பதிவு செய்தல், வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தல் ஆகியவற்றை மேற்கொள்ள தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அப்பள்ளியிலேயே வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு பதிவு செய்தல், வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதில்,தமிழகப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கும் முயற்சிக்காக, பள்ளிக் கல்வி இயக்குனரகம் (டிஎஸ்இ) அண்மையில் அஞ்சல் துறையுடன் (டிஓபி) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பேங்க் அக்கௌன்ட் தொடங்கப்படும். மேலும், மாணவர்களுக்கான ஆதார் அட்டைகளை வாங்கும் முயற்சியை DSE துவக்கியுள்ளது. மேலும், அந்தந்த ஸ்கூல் வங்கிக் கணக்கை ஆதார் அட்டையுடன் இணைக்கும்.
நேரடி பயனாளி பரிமாற்ற முறையில் (DBT) பயனாளி மாணவர்களுக்கு தக்க நேரத்தில், பணம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக பேங்க் கணக்குகளைத் துவங்குவதே கல்வித் துறையின் நோக்கமாகும்.
இந்த டீக்களை குளிர்காலத்தில் குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
school students open bank account
இதற்கிடையில், DSE ஒரு நிலையான செயல்பாட்டு நடைமுறையினை (SOP) பட்டியலிட்டுள்ளது. இதில் மாணவர்களின் வயதுக்கு தகுந்தவாறு வங்கி கணக்குகள் 2 நிலைகளில் திறக்கப்படும். முதல் நிலையில், 5 முதல் 10 வயது வரையில் உள்ள குழந்தைகளுக்கு புதிய பேங்க் அக்கௌன்ட் துவங்கப்படும். மேலும், இளம் மாணவர்களுக்கு, பெற்றோர்/பாதுகாவலருடன் கூட்டுக் கணக்காக பேங்க் கணக்கு தொடங்கப்படும்.
அதுபோல கூட்டுக் கணக்கில், பெற்றோரின் ஆதார் அட்டை எண்ணைச் இணைக்க முடியாது. எனவே குழந்தையின் ஆதார் அட்டை எண்ணை உபயோக படுத்த வேண்டும். தொடர்ந்து, 10 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களின் வங்கி கணக்கு ஆரம்பிக்க, ஆதார் அட்டை எண், அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் தேவை.
மேலும், கணக்கு துவங்கியதும் உடனேயே தலைமை ஆசிரியர்கள் பேங்க் அக்கவுண்ட் எண்ணை கல்வி மேலாண்மை தகவல் அமைப்பில் (EMIS) பதிவேற்றம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என பள்ளிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சுவையாக எலுமிச்சை சாதம் செய்வது எப்படி ?