School students traveling on stairs : மயிலாடுதுறையில் அதிகமாக பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒரு பக்கமாக கவிழ்ந்து விடுவது போல் செல்லும் அரசு பேருந்து. படிக்கட்டுகளில் தொங்கியவாறு ஆபத்தான நிலையில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்:-
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் சாலையில் வந்து கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்றில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான நிலையில் படியில் தொங்கியபடி பயணம் செய்தனர். தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் மார்க்கத்தில் திருப்பனந்தாளிலிருந்து மயிலாடுதுறை அரசு பேருந்தில் குத்தாலம் அருகே அரசு பள்ளிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் அதிகம் பேர் ஏறினர்.
130க்கும் மேற்பட்ட பயணிகள் அந்த பேருந்தில் பயணம் செய்தனர்.அதிக அளவில் பயணிகள் ஏறியதால் அந்த பேருந்து ஒரு பக்கம் சாய்வாக கவிழ்வது போல்ஆபத்தான நிலையில் சென்றது. படியில் பயணம் நொடியில் மரணம் என்பதை எண்ணாமல் ஏராளமான மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்தனர்.
திருப்பனந்தாளில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழித்தடத்தில் ஏராளமான பள்ளி கல்லூரிகள்இருப்பதால் மாணவர்கள் பாதுகாப்பாக பயணம் செய்யும் வகையில் போக்குவரத்து துறையினர் மாணவ மாணவிகள் பயணம் செய்யும் வகையில் காலை மாலை வேளைகளில் கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும், பயணிகளை அதிக அளவில் ஏற்றி செல்லும் நடத்துனர்களுக்கு போக்குவரத்து துறையினர் அறிவுரை வழங்க வேண்டும், காவல்துறையினர் பேருந்துகளில் தொங்கியவாறு மாணவர்கள் பயணம் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகஇருக்கிறது.
இதையும் படிங்க : 21 கிலோமீட்டர் தூரம் வரை பேருந்து ஓட்டுநராக மாறிய மயிலாடுதுறை எம் எல் ஏ..