கைகளால் கிடைக்கும் பலன்களை சொல்லிதான் தெறிந்துகொள்ள வேண்டும் என்று அவசியமில்லை. அதேபோல் ஒரு நாளைக்கு உங்கள் கைகளை எத்தனை தடவை பார்த்துக்கொள்கிறீர்கள் என்பதை கணக்கிட முடியுமா..? நிச்சயம் கணிப்பது கஷ்டம் தான்.
இப்படி கணக்கிடவே முடியாத அளவு கவனித்துக்கொள்ளும் கைகள் தோல் உரிந்து வறண்டு காணப்பட்டால் எப்படி இருக்கும்? அதை போக்க 2 அல்லது 3 நாட்கள் கஷ்டப்படுவோம். அதனை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்றாலும் ஏன் இப்படி உரிகிறது என்ற காரணம் தெரியுமா? சுலபமான முறையில் எவ்வாறு போக்குவது என தெரியுமா?
தோல் உரியக் காரணம் : அடிக்கடி கை உரிதல், அலர்ஜி, அரிப்பு, வறண்ட சருமம், சூரிய ஒளி தாக்குதல், கெமிக்கல் நிறைந்த சோப், க்ரீம்கள், பருவ மாற்றம் மற்றும் சொரியாசிஸ் போன்ற காரணங்களால்தான் கைகளில் தோல் உரிகிறது. அதுமட்டுமில்லாமல் ஊட்டச்சத்துக் குறைபாடு, பாக்டீரியா தொற்று மற்றும் நோய் தொற்று போன்ற காரணங்களாலும் கைகளில் தோல் உரியலாம்.
இதையும் படிங்க : +2 கூட முடிக்கல .. ஆனால் இன்று பல கோடிக்கு அதிபதியான நடிகை.. யார் தெரியுமா..?
இப்படி தோல் உரிந்தால் என்ன பண்ணலாம் : வறண்ட சருமத்தால் அடிக்கடி தோல் உரிகிறதென்றால் இளஞ்சூடான நீரில் கைகளை 10 நிமிடங்கள் மூழ்க விடுங்கள். இதனால் கைகள் மென்மையாகும். வறட்சி விலகும். விட்டமின் E எண்ணெய்யை கைகளில் தடவி மசாஜ் பண்ணினால் ஈரப்பதம் தக்க வைக்கப்பட்டு கைகளும் பளபளக்கும்.
கற்றாழை : கற்றாழை ஜெல்லைப் உபயோகப்படுத்தி கைகளில் மசாஜ் பண்ணி காயவிட்டு வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி தேங்காய் எண்ணெய் தடவிக் கொள்ளுங்கள்.
தேங்காய் எண்ணெய் : கைகளில் தேங்காய் எண்ணெய்யை தடவி 5 நிமிடங்கள் மசாஜ் பண்ணினால் கைகள் பளபளக்கும்.
இதையும் படிங்க : உங்களுக்கு ஃப்ரிட்ஜில் பிரெட்டை வைக்கும் பழக்கம் இருக்கா… நீங்க இதை கட்டாயம் வாசிக்கணும்!!!