Students meet after 70 year : மயிலாதுறை அருகே 70 ஆண்டுகளுக்கு பின்பு சந்தித்து கொண்ட முன்னாள் மாணவர்கள், வகுப்பறையில் அமர்ந்து கரும்பலகையில் எழுதி அவர்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
Students meet after 70 year
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கன்னியாகுடி கிராமத்தில் பாரம்பரியமும், பழமையும் மாறாமல் ஓட்டு கட்டிடத்தில் இயங்கி வரும் தூ. ராம. சித அரசு உதவி பெரும் நடுநிலை பள்ளி அமைத்துள்ளது. இந்த பள்ளியில் 1960 காலகட்டங்களில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. அவர்களுக்கு அந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பிறகு மாணவர்களுடன் கலந்துரையாடினர்.
அதன்பிறகு மாணவர்களுக்கு எழுதுப்பொருட்களை அன்பளிப்பாக அளித்தனர் மற்றும் பள்ளிக்கு பீரோவையும் அன்பளிப்பாக வழங்கினார். அதை தொடர்ந்து அவர்கள் படித்த வகுப்பறையில் அமர்ந்து தங்களது பழைய நினைவுகளை, முன்னாள் மாணவர்கள் பகிர்ந்து கொண்டனர். மேலும், திருக்குறளை கரும்பலகையில் எழுதி கூட்டாக அனைவரும் செல்பி எடுத்துக்கொண்டு மகிழ்ந்தனர். மேலும், அவர்கள் படித்த காலங்களில் கைக்குத்தல் அரிசியை கொண்டு பள்ளி வளாகத்தில் நாங்கள் பராமரித்து வந்த காய்கறிகளை கொண்டு மத்திய உணவு சாப்பிட்டது இன்றும் மறக்க முடியாது என்று ஆனந்தத்துடன் தெரிவித்தனர்.
Read Also : 2023 January Month Whatsapp Status in Tamil