மாணவர்களை ஸ்மார்ட் போன், ஹெட் செட்டுகளில் இருந்து விலக்கி, வேறு வேலைகளில் ஈடுபடுத்துவது பெற்றோர்களுக்கும் கடுமையான வேலையாகவே இருக்கிறது. இந்த நிலையில் கோடை விடுமுறையை பயனுள்ளதாக செலவிடுவது எப்படி என்று பார்க்கலாம்.
கிணற்றில் நீச்சல், தோட்டத்து விவசாயப் பணிகளில் உதவி, கிராம நண்பர்களுடன் கிரிக்கெட், கோயில் திருவிழா, தாச்சாங்கல், தாயம், பல்லாங்குழி என நேரம் சிட்டாய்ப் பறக்கும்.
இதேபோல பேட்மிண்டன், ஸ்கேட்டிங், ஷட்டில், அத்லெட்டிக்ஸ் பயிற்சிகளிலும் மாணவர்கள் கலந்துகொள்ளலாம்.
மூளைக்கு வேலை அளிக்கும் அபாகஸ்,செஸ், கேரம்போர்டு வகுப்புகளில் மாணவர்களைச் சேர்க்கலாம். மொழி ஆளுமையை வளர்க்க ஸ்போக்கன் இங்க்லிஷ், ஃபொனிக்ஸ் உச்சரிப்புப் பயிற்சி, இந்தி உள்ளிட்ட வகுப்புகளில் சேர்க்கலாம்.
கோடை விடுமுறைக்கென்று சில தனியார் நிறுவனங்கள் சிறப்புப் பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றன. குறிப்பாகநடனம், நீச்சல், ஆகிய உடல் சார்ந்த பயிற்சி வகுப்புகளில் குழந்தைகளைச் சேர்க்கலாம்.
Read Also : மயிலாடுதுறை நகராட்சியில் பொங்கல் விழா
வாசிப்பில் மாணவ்ர்களை ஈடுபடுத்தலாம். பெற்றோர் தொலைக்காட்சியையும், செல்போனையும் பார்த்தால், குழந்தைகளும் அதையேதான் செய்வார்கள். குழந்தைகள் முன்பு புத்தகங்களை எடுத்து படித்தால், அவர்களுக்கும் படிப்பில் ஆர்வம் ஊற்றெடுக்கும்.அனைத்திற்கும் மேலாக ஆண்/ பெண் பாலினம் தவிர்த்து, எல்லா குழந்தைகளுக்கும் ஆபத்தில்லாத/ எளிமையான வீட்டு பணிகளைக் கற்றுக் கொடுக்கலாம். நாம் செய்யும்போது உடன் உட்காரச்செய்து கற்று கொடுக்கலாம்.
Read Also : இறால் வறுவல் எவ்வளவு செய்தாலும் காலியாகும் அடுத்த முறை இப்படி செய்து பாருங்க விரும்பி சாப்பிடுவார்கள்!