thaniyar bus mothi oruvar maranam : தனியார் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி:-
தஞ்சை மாவட்டம் மல்லார்பேட்டையை சேர்ந்த இளங்கோவன் என்பவர் மல்லார்பேட்டையில் இருந்து குத்தாலம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார் அப்போது காரைக்காலில் இருந்து சென்று கொண்டிருந்த யுனிவர்சல் என்ற தனியார் பஸ் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ராஜகோபாலபுரம் என்ற இடத்தில் மிகவேகமாக இளங்கோவன் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட இளங்கோவன் கை கால்கள் முறிந்து அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த குத்தாலம் காவல்துறையினர்,அவரது உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பேருந்து ஓட்டுனரை தேடி வருகின்றனர். உடல் பிரேத பரிசோதனை செய்ய மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது.
Read Also : முன்விரோதம் காரணமாக திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் வீடு புகுந்து தாக்குதல்..