மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒரு படத்தில் வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள் மனதில் நிற்பது யார்? என பாடி இருப்பார் அந்தப் பாடலுக்கு ஏற்றார் போல மக்கள் மனதில் என்றும் நீங்கா புகழோடு நிலைத்து நிற்பவர் தான் சின்ன கலைவாணர் விவேக்…
The path that Vivek traversed
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எம் காம் படித்த விவேகானந்தன் பாலச்சந்தரின் படத்தின் மூலம் விவேக்காக மாறினார் இந்த விவேக் என்ற பெயர்தான் ஒரு வரலாறாக மாறப் போகிறது என்று அப்போது அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை
படித்து முடித்த உடனே அரசு தேர்வில் எழுதி அதில் வெற்றியும் கண்டு தலைமைச் செயலகத்தில் வேலையும் கிடைத்தது.. பின்னர் பாலச்சந்தர் இயக்கத்தில் மனதில் உறுதி வேண்டும் பட வாய்ப்பு கிடைத்தவுடன் தன்னுடைய மாபெரும் கனவு நனவாக போகிறது என்று ஓடோடி வந்து நடித்தார் அரசாங்க வேலை செய்து கொண்டிருந்த விவேக் ஒரு கட்டத்தில் சினிமாவுக்காக தன்னுடைய அரசு வேலையையும் ராஜினாமா செய்து விட்டு சின்ன படம் பெரிய படம் என்று எதுவும் பார்க்காமல் கிடைத்த சிறு சிறு வாய்ப்புகள் எல்லாம் பயன்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடிக்க ஆரம்பித்தார்
இதையும் படிங்க : நடிகருக்கு 60 வயது,அவர் திருமணம் செய்த 4 வது மனைவிக்கு 44 வயது விஷயம் இதுதான்.. அந்த நடிகருக்கு சொத்து ரூ.1500 கோடி?
நிலையில்தான் 1987 ஆம் ஆண்டு சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்திருந்தாலும் கூட 2000 ஆண்டு தொடக்கத்தில்தான் விவேக் என்னும் சிந்தனையின் சிகரமாய் அலை கருத்துகளோடு தமிழ் சினிமா ரசிகர்களை தழுவ தொடங்கினார்
ஒரு பக்கம் வடிவேலு ஹீரோக்களிடம் அடி வாங்குவதும் கூட இருப்பவர்களை அடித்து நொறுக்குவதுமாய் குழந்தைகளுக்கு பிடித்த காமெடி பண்ணி ஜெயித்துக் கொண்டிருந்த காலம் அது அதே நேரத்தில் சமூக சீர்திருத்த கருத்துக்களை தன்னுடைய காமெடிக்குள் வைத்து படம் பார்ப்பவர்களை யோசிக்க வைத்தார் சின்ன கலைவாணர் விவேக்.இவர் நடித்த படங்களில் கீழ்வரும் ஆறு முக்கியமான கேரக்டர்களை மக்களால் எப்போதுமே மறந்துவிட முடியாது இயக்குனர் ஹரி இயக்கத்தில் விக்ரம் ஆக்சன் ஹீரோவாக வெற்றி பெற்ற படம் தான் சாமி இந்த படத்தில் குடுமி வெங்கட்ராமன் என்னும் கேரக்டரில் விவேக் நடித்திருப்பார் பிரிவினை மதவாதம் தீண்டாமை என அத்தனை சமூக சீர்கேடுகளையும் தன்னுடைய காமெடி காட்சிகளின் மூலம் வெளுத்து வாங்கி இருப்பார் விவேக்
விக்ரம் காதல் ஹீரோவாக கலக்கிய காதல் சடுகுடு படத்தில் சூப்பர் சுப்பு என்னும் கேரக்டர். குழந்தையை கட்டுப்பாடு பெண் குழந்தையை ஒதுக்குவது மூடநம்பிக்கை என மக்கள் மனதில் இருக்கும் அத்தனை கெட்ட எண்ணத்தையும் சாட்டை எடுத்து அடித்திருப்பார் தளபதி விஜய் நடிப்பில் வெளியான திருமலை படத்தில் பழனி என்னும் கேரக்டர் அரசாங்கத்தின் அலட்சியம் மற்றும் அதனால் ஏற்படும் விபத்துக்களை பற்றி ஒவ்வொரு காமெடி காட்சியிலும் மிகத் துல்லியமாக பேசி இருப்பார் சன் என்று சொல்லி என்ன திருப்பதி வர கூட்டிட்டு வந்துட்டீங்களே என பேசும் வசனம்.
அனைவரையும் நடிகர் விவேக் பற்றி நினைக்கும் போதெல்லாம் எமோஷனல் ஏகாம்பரம் கண்டிப்பாக நம் கண் முன் வந்து போவார் ஒரு படம் முழுக்க வசனமே பேசாமல் தன்னுடைய முக பாவனைகளை வைத்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பார் நடிகர் விவேக் மற்றும் தனுஷ் இருவருக்கும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் காமெடி கெமிஸ்ட்ரி பயங்கரமாக ஒர்க் அவுட் ஆனது அதில் ஹிட்டான படங்கள் தான் படிக்காதவன் மாப்பிள்ளை விஐபி இதில் விஐபி படத்தில் அழகு சுந்தரம் என்னும் கேரக்டரில் நடித்திருப்பார்
இதில் முகம் தெரியாத அவருடைய மனைவி தங்க புஷ்பத்திடம் இருந்து வரும் போன் கால் அதை வைத்து செல் முருகன் மற்றும் தனுஷ் செய்யும் சேட்டை வேற லெவலில் இருக்கும்.மாதவன் மற்றும் லிங்குசாமி கூட்டணியில் வெளியான அதிரடி ஆக்சன் படம் தான் ரன் சண்டை காட்சிகள் நிறைந்த படத்தில் இப்படியும் காமெடி காட்சிகள் வைக்க முடியும் என்பதை நிரூபித்தவர் தான் விவேக் நண்பனை தேடி சென்னைக்கு வரும் மோகன் கேரக்டரில் இந்த படத்தில் நடித்திருப்பார் சென்னைக்கு வந்து அவர் படும் பாடு மற்றும் ஒவ்வொரு பிரச்சனையின் போதும் தன்னுடைய அப்பாவை நினைத்துப் பார்ப்பது என தன்னுடைய மொத்த நகைச்சுவையையும் இதில் கொட்டி தீர்த்து இருப்பார்
இது மட்டுமல்லாமல் இன்னும் பல கேரக்டர்கள் சின்ன கலைவாணர் விவேக் தன்னுடைய சிந்தனையான நகைச்சுவை மூலம் மக்களை கவர்ந்திருக்கிறார்
இதையும் படிங்க : காலிஃபிளவர் ஊறுகாய் செய்வது எப்படி..?