The Pongal Gift in Mayiladuthurai : பொங்கல் பரிசு தொகுப்புகளை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார்:
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டாரத்திற்கு உட்பட்ட ஆறுபாதி ஊராட்சியில் அமைந்துள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு நீளக் கரும்பு, ரூ.1000 ரொக்கத்துடன், வேஷ்டி, சேலை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்புகளை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்
Read Also : ஏவிசி கல்வி நிறுவனங்களில் சமத்துவப் பொங்கல் விழா..
உடன் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மயிலாடுதுறை எம்பி இராமலிங்கம்,பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன்,சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமாமகேஸ்வரி சங்கர்,வேளாண்மை துறை இணை இயக்குநர் சேகர், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் செல்வி.வ.யுரேகா, செம்பனார்கோவில் ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர்,துணை பதிவாளர் (கூட்டுறவு துறை) ராஜேந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் பானுகோபன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.