Theerthawari program Pancha Murthy : திருமண வரம் கொடுக்கும் திருமணஞ்சேரி கோவில் மாசி மக தீர்த்தவாரி. பஞ்ச மூர்த்திகள் விக்ரமன் ஆற்றில் கரையில் எழுந்தருளி நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருமணஞ்சேரி கிராமத்தில் கோகிலாம்பாள் சமேத உத்வாகநாத சுவாமி கோவில் உள்ளது. தேவார பாடல் பெற்ற இந்த ஆலயத்தில் சுவாமி, அம்பாளை வணங்கினால் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். இதனால் திருமணம் கைகூட வேண்டி தினந்தோறும் 100 கணக்கானோர் கோவிலுக்கு வந்து சிறப்பு பூஜைகள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டு செல்வதும், திருமணம் நிறைவேறியதும் தம்பதி சமேதராய் கோவிலுக்கு வந்து பூஜைகள் செய்து செல்வதும் வழக்கம்.
சிறப்புவாய்ந்த இக்கோவிலின் மாசி மக பெருவிழா கடந்த மாதம் 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக 24/02/2024 மாசி மக தீர்த்தவாரி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு சுவாமி, அம்பாள் சோமாஸ்கந்தர் அம்மன திரு ஆபரணங்கள் அணிந்து பல்லக்கில் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளினர். அதை தொடர்ந்து சுவாமி அம்பாள் ஆகிய பஞ்சமூர்த்திகள் வீதி உலாவாக விக்ரமன் ஆற்றின் கரை வந்தடைந்தது.
இதையும் படிங்க : திருநள்ளாறு கோவிலில் எப்படி வழிபடுவது என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, மங்கள வாத்தியம் ஒலிக்க அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது. பின்னர் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கோவில் செயல் அலுவலர் விமலா மற்றும் ஊழியர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இதையும் படிங்க : முட்டை இல்லாமல் ஆம்லெட் செய்வது எப்படி?