விபூதி என்றால் மகிமை, ஐஸ்வர்யம் என்று பொருள், இதனை இட்டுக்கொள்வதற்கு சில விதிமுறைகள் உள்ளது. காலையிலும், மாலையிலும். இரவு தூங்கச்செல்வதற்கு முன்பாகவும் விபூதி இட்டு கொள்ளலாம்.
எங்கெங்கு இட வேண்டும்?
- உச்சந்தலை
- நெற்றி
- மார்புப் பகுதி
- தொப்புளுக்கு சற்று மேல்
- இடது தோள்பட்டை
- வலது தோள்பட்டை
- இடது கை மற்றும் வலது கையின் நடுவில்
- இடது மற்றும் வலது மணிக்கட்டு
- இடது மற்றும் வலது இடுப்புப் பகுதி
- இடது மற்றும் வலது கால் நடுவில்
- முதுகுக்குக் கீழ் பகுதி
- கழுத்து முழுவதும்
- இரண்டு காதுகளின் பின்புறம் உள்ள குழி
விதிமுறைகள் | Thiruneeru Aniyum Murai in Tamil
➤ வலது கையின் நடுவிலுள்ள 3 விரல்களால் எடுத்து தலையை நிமிர்த்தி கொண்டு கிழக்கு திசை பார்த்தோ அல்லது வடக்கு பக்கம் பார்த்தோ பூசிக்கொள்ள வேண்டும்.
➤ நெற்றி முழுவதுமாக அல்லது 3 படுக்கை வசக்கோடுகளாக இட்டுக்கொள்ள வேண்டும்.
➤ சிவனடியார், ஆச்சாரியார் இவர்களிடம் விபூதி பெறும் போது அவர்களை வணங்கியா பின்பு விபூதி பெறுதல் வேண்டும், வெள்ளை நிற விபூதி மட்டுமே தரிக்க வேண்டும்.
➤ கோவிலில் பிரசாதமாக வாங்கும்போது இடது கைமேல் வலது கையை வைத்து வாங்க வேண்டும்.
➤ அதனை ஒருதாளில் சேமித்து அதை நெற்றியில் பூசிக்கொள்ள வேண்டும், ஒருவர் விபூதி கொடுத்தால் வாங்க மறுப்பு சொல்லக்ககூடாது.
இதையும் படிங்க : கருங்காலி மாலை இவங்கல்லாம் அணிய கூடாது…மீறினா என்ன நடக்கும் தெரியுமா?
பலன்கள்
- மனதில் சங்கடங்கள், தீய எண்ணங்கள் விலகி இறைபக்தி கூடுதலாகும்.
- நல்ல குடும்பம், நல்ல உறவுகள் என நேர்மறையானவர்கள் உடனிருப்பார்கள்.
- உடல் ஆரோக்கியம் மேம்படும், செல்வம் அதிகரிக்கும், தீய செயல்களில் இருந்து காக்கப்படுவீர்கள்.
இதையும் படிங்க : தேங்காய், தக்காளி சேர்க்காமல் மதுரை நீர் சட்னி செய்வது எப்படி? 2 இட்லி கூடுதலாக சாப்பிடுவாங்க..!